சரவணபவன் உரிமையாளர் இராஜகோபால் அவர்களின் வளர்ச்சியும் வீழ்ச்சியும். இந்த புத்தகத்தின் ஆரம்பமே ஒரு த்ரில்லர் படத்தின் ஆரம்பம் போன்றுதான் இருந்தது.கொடைக்கானல் போலிஸ் மலையடிவாரத்தில் அழுகும் நிலையில் ஒரு ஆண் பிணத்தை கண்டுபிடிக்கிரார்கள்.அது யார் என்று அடையாளம் தெரியாததால், பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்கிரார்கள்.அதிலிருந்து புத்தகம் இராஜகோபால் அவர்களின் இளமை காலத்திற்க்கு திரும்புகிறது. தென்கோடி தமிழகத்தின் ஒரு குக்கிராமத்தில் ஒரு சாதாரண கீழ்நடுத்தரவர்க குடும்பத்தில் பிறக்கிறார்.இளமையிலிருந்தே தாயின் மூலம் முருக பக்தியுடன் வளர்கிறார்.பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிருத்திவிட்டு, சிறு சிறு வேலைகள் செய்து ,கடைசியாக தன் 15ம் வயதில் சென்னைக்கு வருகிறார்.கே.கே.நகரில் மளிகை கடையில் வேலை பார்க்க ஆரம்பித்தவர்,வெகுவிரைவிலேயே சொந்த தொழில் ஆரம்பிக்க முனைகிறார். அந்த காலகட்டத்தில் கே.கே.நகரில் நல்ல உணவகங்கள் இல்லாத நிலையில்,சரவணபவன் ஆரம்பிக்கிறார்.இந்நிலையில் இப்புத்தகம் 1980 வாக்கில் சென்னையின் ஹோட்டல் நிலவரமும் மக்களின் உணவு பழக்கவழக்க...
I write book reviews here