மவுண்ட்பேட்டன் கடைசி வைஸ்ராயாக பொருப்பேற்றதிலிருந்து(1947 தொடக்கம்) மஹாத்மா காந்தியின் மறைவுவரை இந்தியாவில் நடந்த நிகழ்ச்சிகளின் தொகுப்புதான் இந்த பத்தகம்.வெறும் இரண்டாண்டுகள்தான் என்றாலும்,இந்தியாவில் மிகப்பெரிய பல மாற்றங்கள் நடைபெற்ற காலம்.இந்திய சுதந்திரம்,இந்தியா பாகிஸ்தான் பிரிவினை,மஹாத்மா காந்தியடிகள் படுகொலை என பல முக்கிய நிகழ்ச்சிகள் நடந்த கொந்தளிப்பான காலகட்டம். இங்கிலாந்து பிரதமர் க்ளமண்ட் அட்லி மவுண்ட்பேட்டனை புதிய வைஸ்ராயாக நியமிக்கிறார்.அவரிடம் தரப்பட்ட பொருப்பு இந்தியாவிற்க்கு விரைவில் சுதந்திரம் வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தல்.இது நடந்த்து 1947 தொடக்கம்.மவுண்ட்பேட்டன் தயக்கத்துடனேயே பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்.அதுவரை அவர் மத்திய ஆசியாவின் கப்பற்ப்படை தளபதியாக பொறுப்பேற்று சிறப்ப...
I write book reviews here