Freedom at Midnight - Larry Collins & Dominique Lapierre

             மவுண்ட்பேட்டன் கடைசி வைஸ்ராயாக பொருப்பேற்றதிலிருந்து(1947 தொடக்கம்) மஹாத்மா காந்தியின் மறைவுவரை இந்தியாவில் நடந்த நிகழ்ச்சிகளின் தொகுப்புதான் இந்த பத்தகம்.வெறும் இரண்டாண்டுகள்தான் என்றாலும்,இந்தியாவில் மிகப்பெரிய பல மாற்றங்கள் நடைபெற்ற காலம்.இந்திய சுதந்திரம்,இந்தியா பாகிஸ்தான் பிரிவினை,மஹாத்மா காந்தியடிகள் படுகொலை என பல முக்கிய நிகழ்ச்சிகள் நடந்த கொந்தளிப்பான காலகட்டம்.

புலிநகக் கொன்றை - பி.ஏ.கிருஷ்ணன்

        தென்தமிழகத்தில் வாழ்ந்த தென்கலை ஐயங்கார் குடும்பத்தின் நான்கு தலைமுறை கதைதான் புலிநகக்கொன்றை. இதன் ஆசிரியர் அதே சமூகத்தைச் சேர்ந்தவரென்றாலும்,ஒரு பரிவுடன் இதை எழுதவில்லை.ஒவ்வொரு கதாபாத்திரத்தின் சித்தரிப்பும் விரிவானவை.கதைச்சித்தரிப்பும் ஒரே காலவரிசையில் இல்லாமல் கடந்த காலமும் நிகழ்காலமும்  மாறிமாறி வருகின்றன.