முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒற்றை வைக்கோல் புரட்சி - மசானபு ஃபுகோகோ

                           என் புரிதலில் இயற்கை விவசாயமென்றால் வேதிப்பொருள் கலந்த உரங்களைப் பயன்படுத்தாமல்,மரபனு கலப்பின விதைகளை பயன்படுத்தாமல் இயற்கையாக கிடைக்கும் விளைபொருட்களை கொண்டே செய்யப்படும் விவசாயம்.ஆனால் இந்த புத்தகத்தைப் படித்தபிறகு இன்னும் ஒரு படி மேலே சென்று நிலம் உழுதல் கூட இயற்கை விவசாயத்தில்(ஏர் பூட்டியோ அல்லது ட்ராக்டர் உதவியுடனோ) தேவையில்லாதது.எவ்வாறு காட்டில் யாருடைய முயற்சியுமின்றி மரங்கள் வளர்ந்து காய்கனிகள் காய்க்கின்றனவோ , அதேபோல விவசாயமும் இயற்கையிடமே விட்டுவிடப்படவேண்டும்.                விவசாயி விதைகளைத் மட்டும் தூவிவிட்டு அறுவடை செய்யும் வரை எந்த வேலையும் செய்யாமல் இருத்தலே போதுமானது.நிலம் உழுதலே இயற்கை வேளாண்மைக்கு தேவையில்லாத்து என்பது ஆச்சர்யமளிக்கும் செய்தி.பூச்சிகளும் மண்புழுக்களுமே தன்னிச்சையாக நிலம் உழுதலை செய்துவிடுகின்றன.நாமாக உழும்போது இப்படிப்பட்ட மண்புழுக்கள் இறப்பதற்க்கும் ,முளைக்கவே முடியாத களைச்செடிகள் முளைத்துவிடும் வாய்ப...