நான் இந்த புத்தகத்தை படிப்பதற்க்கான முக்கிய காரணம் இதில் எம்.எஸ்.சுப்புலட்சுமி G.N.Bக்கு எழுதிய காதல் கடிதங்கள் உள்ளன என்பதால்தான்.இதை படித்து முடித்தபோது எம்.எஸ் பற்றிய ஒரு பிம்பம் கிடைத்தது.ஏற்கனவே அவர் பற்றிய பிம்பத்தில் சிறிது மாற்றம் ஏற்ப்பட்டாலும் , எந்த சிதைவும் இல்லை.இதற்கு காரணம் சிரு வயதிலிருந்தே அவரைப்பற்றிய செய்திகளை கேட்டே வளர்ந்திருக்கிறேன். எம்.எஸ் பற்றிய பிம்பமென்பது அவர் அலாதி பக்தியள்ளவர்.இசை ஒன்று மட்டுமே தெரிந்தவர்.கெஞ்சம் வெகுளி.கணவணே கண்கண்ட தெய்வம் என்றிருந்தவர்.இவை அனைத்தும் உண்மைதான்.ஆனால் அவர் ஒன்றும் தெரியாத அப்பாவி அல்ல.இந்த பிம்பம் திருமணத்திற்க்கு முன் எம்.எஸ் G.N.Bக்கு எழுதிய காதல் கடிதங்களால் உடையலாம் என சிலர் கருதலாம்.நான் அவ்வாறு நினைக்கவில்லை.இந்த கடிதங்கள் எம்.எஸ் ன் அக்காலத்திய மனவோட்டத்தை புரிந்து கொள்ள உதவலாம்.எம்.எஸ் தன் எதிர்காலத்தை கணக்கிட்டே தன்னுடைய காதல் முடிவுகளை எடுத்திருக்கிறார் என்றே இந்நூலாசிரியர் சொல்லவருகிறார்.நாம் அனைவருமே அப்படித்தான்.எதிர்காலத்தை மனதில் வைத்தே எதையும் செய்கிறோம்.எம்.எஸ் தான் வாழ்வில் அடைந்த உ...
I write book reviews here