முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

The Anarchy - William Dalrymple

                                                எனக்கு தெரிந்த இந்திய வரலாறு என்பது 1947க்கு பின் நடந்தவை.அதற்கு முன்பான வரலாறென்பது துணுக்குச்செய்திகளாக தெரியுமே தவிர விரிவான பார்வை கிடையாது.பொதுவாக என் புரிதலென்பது 200 ஆண்டுகள் ஆங்கிலேய ஆட்சி அதற்கு முன் 800 ஆண்டுகள் முகலாயர்கள் ஆட்சி அதில் சில பெயர்கள் தவிர பெரிதாக எதுவும் தெரியாது.அவ்வப்போது படிக்கும் சில கட்டுரைகள்.இவையெல்லாம் துணுக்குச்செய்திகளாக தெரியுமே தவிர,ஒட்டுமொத்த வரலாறு தெரியாது.இந்த பின்னணியில் The Anarchy புத்தகம் 1600 முதல் 1800 வரையிலான இந்தியாவின் முழு வரலாற்றையும் விவரிக்கிறது.கிழக்கிந்திய கம்பெனி(EIC) தோன்றியதிலிருந்து அவர்கள் இந்தியாவை தங்கள் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது வரை மிகமிக விரிவாக சுவாரஸ்யமாக இந்த நூலின் ஆசிரியர் எழுதியுள்ளார்.இப்படிப்பட்ட ஒரு வரலாற்று நூல் இதற்கு முன் நான் படித்ததில்லை.       ஆசிரியர் இந்தியாவை ஆங்கிலேயர்...

வெண்முரசு - ஜெயமோகன்

சென்னை எழும்பூரில் நடைபெற்ற வெண்முரசு முதல் நான்கு நூல் வெளியீட்டு விழாவில்(கமல்,அசோகமித்ரன் பங்கேற்ற)  முதற்கனல் மற்றும் வண்ணப்பாடல் நூல்களை வாங்கினேன்.ஆனால் வாங்கியதை அப்படியே அலமாரியில் வைத்துவிட்டேன்.நான்கு ஆண்டுகள் கழித்துத்தான் படிக்க ஆரம்பித்தேன்.வெண்முரசு   படிக்க ஆரம்பித்த்திலிருந்து அடுத்த இரண்டாண்டுகள் வேறு எந்த புத்தகமும் படிக்கவில்லை.தொடர்ச்சியாக  26 பாகங்களையும் படித்து முடித்தேன்.வெண்முரசை முழுமையாக படித்து முடித்ததே என்னளவில் பெரும்சாதனை.இதை எழுதிய ஜெயமோகனுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். முதற்கனலில் மானசாதேவி,அவள் மகன் ஆஸ்திகன் அவர்களுடைய வீடு, காடு என அனைத்தும் என் கண்முன் உள்ளது.முதல் பாகத்திலிருந்து இறுதி பாகம் வரை இந்த நூலில் உள்ள அனைத்து இடங்களுக்கும் ஏதோ நானே நேரில் சென்று தொட்டுப்பார்த்ததாகவே உணர்கிறேன்.அவ்வளவு வர்ணனை.துரோனரின் இளமை பருவம் முதல் அவர் ஆசிரியர் ஆகும் வரை உள்ள காலம் ,அவர் வாழ்ந்த இடத்தின் வர்ணனை இன்றும் பசுமையாக என் கண்முன் உள்ளது.அவர் இளமைபருவம் படிக்கும் போது கொஞ்சம் பரிதாபமாக இருந்தது. வெண்முரசில் கிருஷ்ணர்(இளைய யாதவர்) என...

Zorba the Greek - Nikos Kazantzakis

இந்த நாவல் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்பதைத்தான் சொல்கிறது.இந்த கதை முழுவதும் சொல்லப்படுவது ஒரு பணக்கார,புத்தகபுழுவாக , எப்போதும் தத்துவ தேடலுடன் உள்ள ஒருவர் மூலமாக சொல்லப்படுகிறது.அவர் தற்செயலாக ஃகபே ஒன்றில் ஜோர்பாவை சந்திக்கிறார்.ஜோர்பா தனக்கு நன்றாக சமைக்கத் தெரியும் என்றும் Santuri இசை கருவியை நன்றாக வாசிக்கத் தெரியும் என்றும்  தனக்கு ஏதாவது வேலை கொடுத்தால் தங்களுடனே வந்துவிடுவதாகவும் கதைசொல்லியிடம் கேட்கிறார்.ஜோர்பாவின் பேச்சு ,தோற்றம் இவையெல்லாம் முதல் சந்திப்பிலேயே கதை சொல்லியை ஈர்க்கிறது.ஜோர்பாவை வேலைக்கு சேர்த்துக் கொள்கிறார்.அதற்குபின் ஜோர்பாவின் கடந்த காலம் துண்டுதுண்டாக விவரிக்கப்படுகிறது. ஜோர்பாவுக்கு மறுபிறவி,சொர்கம்,நரகம் போன்ற கருதுகோள்களில் நம்பிக்கையற்றவர்.ஜோர்பாவின் தத்துவப்படி கடவுளும் சாத்தானும் ஒன்றே.மகிழ்ச்சி என்பது இந்தப் பிறவியில் இந்த பூமியில் மட்டுமே சாத்தியம்.அதை இங்கு அனுபவிக்காமல் அது வேறு எங்கோ உள்ளது என்பதிலெல்லாம் நம்பிக்கையற்றவர். கதைசொல்லி வாழ்கை தொடர்பான தத்துவார்த்தமான கேள்விகளுக்கு விடைதேடி புத்தகத்தை நாடுகிறார்.தினசரி நடைமுறை வாழ்கையி...

The Man Who Knew Infinity - Robert Kanigel

  ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றை எப்படி எழுத வேண்டும் என்பதற்கு இந்த நூல் ஒரு சிறந்த உதாரணம்.இந்நூல் மூலம் ராமானுஜன் மேலும் G.H.Hardy மேலும் ஏற்படும் பெருமதிப்பு,வியப்பு இந்நூலாசிரியர் மேலும் ஏற்படுகிறது.காரணம் இந்நாலூக்காக அவர் செலுத்தியிருக்கும் உழைப்பு. ராமானுஜத்தின் கணிதம் எவ்வளவு சிக்கலானதோ அதேபோல அவர் வாழ்க்கையும் சிக்கலானது.காலத்தால் நூறு ஆண்டுகளுக்கு முந்தையது.ஆசிரியருக்கு இந்திய வாழ்கைமுறை மிக அண்ணியமானது.மேலும் நூறு ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்கைமுறை அவருக்கு மேலும் புரிந்து கொள்ள கடினமானது.இருந்தும் மிகச் சிறப்பாக இந்நாலை எழுதியிருக்கிறார். ராமானுஜனின் பிறப்பு முதல் அவரின் இறுதி காலம் வரை அவருடையப்  பயணத்தை அழகாக சொல்லியிருக்கிறார்.இது எந்த அளவுக்கு ராமானுஜனின் வரலாரோ அதே அளவுக்கு G.H.Hardyன் வரலாறும் ஆகும்.ஒருவகையில் ஒருவரை பிரித்து இன்னொருவர் வரலாற்றை எழுதிவிட முடியாது என்றளவிற்கு அவர்கள் பிணைப்புள்ளது. ராமானுஜன் ஒரு சுயம்புவாகவே கணிதம் கற்றிருக்கிறார்.அவர் கணிதப்புத்தகம் மூலம் தானே பயின்றிருக்கிறார்.எந்த முறையான கணிதப் பயிற்ச்சியும் அவருக்கில்லை.இது வரமா அல்லது...

The Selfish Gene - Richard Dawkins

  பொதுவாக நம்மிடம் ஒரு நம்பிக்கை உண்டு.அதாவது ஏலியன்கள் நம்மை விட அதி புத்திசாலிகளாக இருப்பார்கள்.ஏலியன்களையே பார்க்காமல் அவர்கள் நம்மைவிட புத்திசாலிகளாக இருப்பார்கள் என்று எவ்வாறு கூறமுடியும்.ஏனென்றால் மனிதர்களாகிய நம்மால் இதுவரை ஒரு விஷயத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.அதில் ஏலியன்கள் நம்மைவிட சிறந்தவர்களாக விடை தெரிந்தவர்களாக இருப்பார்கள் என நம்பப்படுகிறது.அந்த விஷயம் பூமியில் எவ்வாறு உயிர்கள் தோன்றின?இதற்கான விடை நம்மிடம் தற்போதுவரை இல்லை.நாம் கண்டுபிடித்ததெல்லாம் அனுமானங்கள்தான்(theory).திட்டவட்டமான விடை இல்லை.டார்வினின் பரிணாம வளர்ச்சிக்கொள்கைகூட ஓரு உயிரினத்திலிருந்து மற்றொரு உயிரினம் எவ்வாறு பரிணாம வளர்ச்சிப் பெற்றது என்பதைத்தான் சொல்கிறதே  தவிர எவ்வாறு உயிர்கள் தோன்றின என்பதைப் பற்றி சொல்லவில்லை. Richard Dawkins(RK) இந்த அடிப்படை கேள்விக்கான விடை தேடியே இந்த புத்தகத்தை ஆரம்பிக்கிறார்.அவர் கூற்றுப்படி பூமியில் உள்ள எந்த உயிரினத்திற்க்கும் (மனிதன்,விலங்கு,பறவை,பூச்சிகள்,மரம்,செடி,கொடி,தாவரங்கள்) அடிப்படை அலகு என்பது மரபணு(gene) தான்.டார்வின் தன் பரிணாம வளர்ச்சி கொள்கைய...

ஒற்றை வைக்கோல் புரட்சி - மசானபு ஃபுகோகோ

                           என் புரிதலில் இயற்கை விவசாயமென்றால் வேதிப்பொருள் கலந்த உரங்களைப் பயன்படுத்தாமல்,மரபனு கலப்பின விதைகளை பயன்படுத்தாமல் இயற்கையாக கிடைக்கும் விளைபொருட்களை கொண்டே செய்யப்படும் விவசாயம்.ஆனால் இந்த புத்தகத்தைப் படித்தபிறகு இன்னும் ஒரு படி மேலே சென்று நிலம் உழுதல் கூட இயற்கை விவசாயத்தில்(ஏர் பூட்டியோ அல்லது ட்ராக்டர் உதவியுடனோ) தேவையில்லாதது.எவ்வாறு காட்டில் யாருடைய முயற்சியுமின்றி மரங்கள் வளர்ந்து காய்கனிகள் காய்க்கின்றனவோ , அதேபோல விவசாயமும் இயற்கையிடமே விட்டுவிடப்படவேண்டும்.                விவசாயி விதைகளைத் மட்டும் தூவிவிட்டு அறுவடை செய்யும் வரை எந்த வேலையும் செய்யாமல் இருத்தலே போதுமானது.நிலம் உழுதலே இயற்கை வேளாண்மைக்கு தேவையில்லாத்து என்பது ஆச்சர்யமளிக்கும் செய்தி.பூச்சிகளும் மண்புழுக்களுமே தன்னிச்சையாக நிலம் உழுதலை செய்துவிடுகின்றன.நாமாக உழும்போது இப்படிப்பட்ட மண்புழுக்கள் இறப்பதற்க்கும் ,முளைக்கவே முடியாத களைச்செடிகள் முளைத்துவிடும் வாய்ப...

M. S. Subbulakshmi: The Definitive Biography - T.J.S.George

  நான் இந்த புத்தகத்தை படிப்பதற்க்கான முக்கிய காரணம் இதில் எம்.எஸ்.சுப்புலட்சுமி G.N.Bக்கு எழுதிய காதல் கடிதங்கள் உள்ளன என்பதால்தான்.இதை படித்து முடித்தபோது எம்.எஸ் பற்றிய ஒரு பிம்பம் கிடைத்தது.ஏற்கனவே அவர்  பற்றிய பிம்பத்தில் சிறிது மாற்றம் ஏற்ப்பட்டாலும் , எந்த சிதைவும் இல்லை.இதற்கு காரணம்  சிரு வயதிலிருந்தே அவரைப்பற்றிய செய்திகளை கேட்டே வளர்ந்திருக்கிறேன். எம்.எஸ் பற்றிய பிம்பமென்பது அவர் அலாதி பக்தியள்ளவர்.இசை ஒன்று மட்டுமே தெரிந்தவர்.கெஞ்சம் வெகுளி.கணவணே கண்கண்ட தெய்வம் என்றிருந்தவர்.இவை அனைத்தும் உண்மைதான்.ஆனால் அவர் ஒன்றும் தெரியாத அப்பாவி அல்ல.இந்த பிம்பம் திருமணத்திற்க்கு முன் எம்.எஸ் G.N.Bக்கு எழுதிய காதல் கடிதங்களால் உடையலாம் என சிலர் கருதலாம்.நான் அவ்வாறு நினைக்கவில்லை.இந்த கடிதங்கள் எம்.எஸ் ன் அக்காலத்திய மனவோட்டத்தை புரிந்து கொள்ள உதவலாம்.எம்.எஸ் தன் எதிர்காலத்தை கணக்கிட்டே தன்னுடைய காதல் முடிவுகளை எடுத்திருக்கிறார் என்றே இந்நூலாசிரியர் சொல்லவருகிறார்.நாம் அனைவருமே அப்படித்தான்.எதிர்காலத்தை மனதில் வைத்தே எதையும் செய்கிறோம்.எம்.எஸ் தான் வாழ்வில் அடைந்த உ...