இந்த குறுநாவலைப் படித்தது ஒரு திரைப்படம் பார்த்ததைப் போன்று காட்சிகள் கண்முன் விரிகின்றன.படு விறுவிறுப்பான நாவல்.நான் பல முறை விமானத்தில் பயணித்திருக்கிறேன்.பல நாட்டு விமான நிலையங்களில் சுற்றியிருக்கிறேன்.ஆனாலும் இதில் வரும் விமான நிலைய வருணிப்பு சுவாரஸ்யமாகவே இருந்தது.எப்போதும் எனக்கு விமானப்பயணம் களிப்பூட்டுவதாக இருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாத சிறு பயமும் உண்டு.அந்தரத்தில் பறக்கும் விமானம் சிறிது நடுங்கினாலும் பயம்.ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கா செல்லும் போது ஆறு மணிநேரம் கடலுக்கு மேலேயே பயணம் செய்யும் போதும் பயம்.அந்த வரிசையில் தீவிரவாதிகளின் கடத்தல் பற்றிய பயமும் சிறிதளவு உண்டு(இது நிறைய திரைப்படம் பார்ப்பதால் வரும் விளைவு என நினைக்கிறேன்). இந்தக் கதையில் வரும் விமானம் பறக்கவேயில்லை.கடத்தப்பட்டும் தரையிலேயே இருக்கிறது.இந்தக் கதையில் எவ்வளவு கற்பனை எவ்வளவு உண்மை என்று சொல்ல முடியாத அளவிற்கு நுட்பமான விவரணை.தங்கம் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு ...
I write book reviews here