தென்தமிழகத்தில் வாழ்ந்த தென்கலை ஐயங்கார் குடும்பத்தின் நான்கு தலைமுறை கதைதான் புலிநகக்கொன்றை . இதன் ஆசிரியர் அதே சமூகத்தைச் சேர்ந்தவரென்றாலும்,ஒரு பரிவுடன் இதை எழுதவில்லை.ஒவ்வொரு கதாபாத்திரத்தின் சித்தரிப்பும் விரிவானவை.கதைச்சித்தரிப்பும் ஒரே காலவரிசையில் இல்லாமல் கடந்த காலமும் நிகழ்காலமும் மாறிமாறி வருகின்றன. பொன்னா பாட்டி,நம்மாழ்வார்,நம்பி.கண்ணன் கதாபாத்திரங்கள் விரிவாக சித்தரிக்கப்பட்டுள்ளன.பட்சி,திருமலை,மதுரகவி,ராதா கதாபாத்திரங்கள் மிக குறைவாக விவரிக்கப்பட்டுள்ளனர்.ஆண்டாள்,ரோசா கதாபாத்திரங்கள் பரவாயில்லை . இளம் விதவைகளிண் அன்றைய பரிதாபத்துக்குரிய நிலை ஆண்டாள் கதாபாத்திரம் மூலம் துல்லியமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண் இதைப்போல் இருந்திருப்பாள்.ஆண்டாளின் தந்தை ஜீயரிடம் தன் மகள் மறுமணம் பற்றி யோசனை கேட்க ,அவர் அது வைஸ்ணவ சம்பிரதாயத்திற்க்கு எதிராணததென்று அனுமதி மறுக்க,ஆண்டாளின் வாழ்க்கையே தடம் புரள்கிறது. ...
I write book reviews here