முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சலம் - பா.ராகவன்

                                இந்த நாவல் அதர்வண வேத காலத்தில் நடக்கும் கதை.நாவலின் பின் அட்டையில் சொல்லியபடி இது ஒரு முன்னுதாரணம் அற்ற நாவல்.சரஸ்வதி நதி எவ்வாறு மறைந்திருக்கும் என்பதை விவரிக்கும் ஒரு மாய யதார்த்த நாவல்.           அதர்வன்,குத்சன்(சுத்திர முனி),சாரன்,விண்ணுலா,காமாயனி- இவர்கள் தான் முக்கிய கதாபாத்திரங்கள்.அதர்வ மஹரிஷி தன் ஆசிரமத்தில் பல்வேறு தரப்பட்ட மாணாக்கர்களுக்கு பாடம் கற்பிக்கிறார்.ஆனால் குத்சனை மட்டும் தவிர்க்கிறார்.குத்சனை முனி என்றும் அங்கீகரிக்கிறார்.குத்சன் அதர்வன் மேல் பெருமதிப்பு வைத்திருந்தாலும் ,தன்னை சீடனாக ஏற்க மறுப்பதால் அதர்வன் மேல் கோபம் கொள்கிறார்.ஒரு கட்டத்தில் ஒருவர் மேல் மற்றொருவர் மாறி மாறி சாபம் கொள்கிறார்கள்.இயற்கை ரிதனின் படி அதர்வன் பிறப்பும் இறப்பும் அற்றவன்.ஆனால் குத்சனின் சாபம் அதை குலைக்கிறது.குத்சனின் சாபத்தை நிறைவேற்ற பைசாச குலத்தைச் சேர்ந்த சாரன் வருகிறான்.கடைசியில் சாரன் எவ்வாறு அதர்வனை கொல்கிறான்,சரஸ்வதி நதி எ...

நீலவானம் - ரமணன்

                           இந்த குறுநாவலைப் படித்தது ஒரு திரைப்படம் பார்த்ததைப் போன்று காட்சிகள் கண்முன் விரிகின்றன.படு விறுவிறுப்பான நாவல்.நான் பல முறை விமானத்தில் பயணித்திருக்கிறேன்.பல நாட்டு விமான நிலையங்களில் சுற்றியிருக்கிறேன்.ஆனாலும் இதில் வரும் விமான நிலைய வருணிப்பு சுவாரஸ்யமாகவே இருந்தது.எப்போதும் எனக்கு விமானப்பயணம் களிப்பூட்டுவதாக இருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாத சிறு பயமும் உண்டு.அந்தரத்தில் பறக்கும் விமானம் சிறிது நடுங்கினாலும் பயம்.ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கா செல்லும் போது ஆறு மணிநேரம் கடலுக்கு மேலேயே பயணம் செய்யும் போதும் பயம்.அந்த வரிசையில் தீவிரவாதிகளின் கடத்தல் பற்றிய பயமும் சிறிதளவு உண்டு(இது நிறைய திரைப்படம் பார்ப்பதால் வரும் விளைவு என நினைக்கிறேன்).           இந்தக் கதையில் வரும் விமானம் பறக்கவேயில்லை.கடத்தப்பட்டும் தரையிலேயே இருக்கிறது.இந்தக் கதையில் எவ்வளவு கற்பனை எவ்வளவு உண்மை என்று சொல்ல முடியாத அளவிற்கு நுட்பமான விவரணை.தங்கம் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு ...

Pather Panchali - Bibhutibhushan Bandyopadhyay

                                                                                இந்த வருடம் நான் படித்த மிகச் சிறந்த நாவல் என்றால் அது இதுதான்.மிகச் சிறந்த நாவல்.கொஞ்சம் கூட மிகையில்லாமல் யதார்த்தமாக வங்கத்தின் கிராமிய வாழ்க்கையை படம் பிடித்துக்காட்டுகிறார்.நாவல் முழுவதும் சிறுவர்கள் பார்வையிலேயே எழுதப்பட்டுள்ளதால் சாதாரணமாக தெரியும் விஷயங்களும் அசாதரணமாக ஆகிவிடுகின்றன.             இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்கள் இனி என் வாழ்நாள் முழுக்க என்னுடனேயே இருக்கப் போகிறார்கள்.துர்காவும் ஓப்புவும் குழந்தைகள்.இவர்களை எல்லோருக்கும் பிடிக்கும்.எனக்கும்தான்.அதைவிட இவர்களின் தாயான சோர்போச்யாதான் எனக்கு பிடித்த கதாபாத்திரம்.வயதானவர்களின் வலியை நிற்கதியை அழுத்தமாக பதிவு செய்யும் நாவல்.18/19ம் நூற்றாண்டில் வறுமை எவ்வாறு...

Crime and Punishment

                                                   ராஸ்கோல்நிகோவ் என்னும் இளைஞன் இரு கொலைகளைச் செய்கிறான்.ஏன் இந்த கொலைகளை செய்தான்?கொலைக்கு பின்னான அவன் மனப்போராட்டம் .இதையேயே மையமாக வைத்து   எழதபட்ட மிகமிக சுவார்ஸ்யமான,விருவிருப்பான நாவல்.இது வெறும் துப்பரியும் நாவல் மட்டும் இல்லை.             ராஸ்கோல்நிகோவ் ஒரு மதுபான விடுதியில் தற்செயலாக மார்மல்யாடோவை சந்திக்கிறான்.மார்மல்யாடோவ் தன் சோக கதையை ராஸ்கோல்நிகோவிடம் விவரிக்கிறார்.ஒட்டுமொத்த நாவலிலும் மிகச் சிறந்த பகுதி என்று இதைத்தான் குறிப்பிடுவேன்.மார்மல்யாடோவ் தன் முதல் மனைவி மூலம் பெற்ற மகள் சோபியா(சோனியா).பதின்ம வயது.முதல் மனைவி இறந்தவுடன் இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார்.அவரின் இரண்டாம் மனைவிக்கும்(கட்ரினா இவானோவ்னா) இது இரண்டாம் திருமணம்.அவரின் முதல் திருமணம் மூலம் ஏற்கனவே மூன்று குழந்தைகள்.மூவரும் பால்ய வயதினர்.மார்மல்யாடோவ் தன் குடும்பத்த...

Sapiens: A Brief History of Humankind - Yuval Noah Harari

                     இது நான் மிகுந்த ஆவலுடன் படிக்கத் துவங்கிய நூல்.ஆனால் படித்து முடிக்கும் போது மிகுந்த ஏமாற்றத்துடன் இருந்தது.ஹராரி ஒரு பிரசாரகர்(propagandist).காலனியாதிக்கம்,முதலாளித்துவம்,மேற்கத்திய மேட்டிமைவாதம் இவைகளின் பிரசாரகர்.இந்த நூலில் எனக்கிருந்த பிரச்சனைகளை கீழே பட்டியலிடுகிறேன்.               ஆதிகாலத்தில்  மனிதன் அமெரிக்காவிற்க்கும், ஆஸ்திரேலியாவிற்க்கும் முதன்முதலில் குடியேறிய நாட்களில்  அங்கு அவர்கள் செய்ததாக சொல்லப்படும் செயல்கள் ஊகங்களே(எ.கா.பெரும்பான்மையான அரிய வகை விலங்குகளை கொன்றொழித்தது).அதற்கு எந்தவித உறுதியான ஆதாரங்களும் இல்லை.ஆனால் ஹராரி எல்லாவற்றையும் விலாவாரியாக ஏதோ நேரில் பார்த்தவர் போல்  விவரிக்கிறார்.ஏன் இவ்வாறு செய்கிறார் என்பது நூலின் பிற்பகுதியை படிக்கும் போதுதான் புரிகிறது.மேற்கத்தியர்கள் காலனியாதிக்கதின் போது அவர்கள் செய்த கொடுஞ்செயல்களை ஆதிகால பழங்குடியினர் செய்த செயல்களோடு ஒப்பிடும் போது ஒன்றுமில்லை என உணர்த்தத்தான் அவ்வாறு எழுதியிருக...

ஜெயமோகன் குறுநாவல்கள்

                         கிளிக்காலம்:          ஒரு விடலைச்சிறுவன் பெரியவனாகும் கதை.ஜெயமோகன் தரத்தில் இது சுமார் கதை.ஆனால் இதிலும் நல்ல விவரணை.கதை களத்தை கண்முன் காட்டும்படி விவரித்திருக்கிறார். பூமியின் முத்திரைகள்:          இது சுமாரான கதை.நண்பனின் இறப்பை ஒட்டி அவன் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.இதில் வரும் விவரணைகள் எதுவும் கவரவில்லை.      மடம்:         இது முழுக்க முழுக்க கிண்டல்.இதில் மடத்தின் குருவையோ , குருவிற்க்கு அடுத்ததாக வரும் பண்டாரத்தையோ கிண்டல் செய்யவில்லை.கிண்டல் முழுக்க கனபாடிகளைத்தான்.தமிழ்நாட்டில் திராவிட கழகங்கள் இல்லாத நிலையில் இக்கதை சுவாரிஸ்யமாக இருந்திருக்கும்.ஆனால் இங்கு நாளொரு மேனியும் இதே போன்ற பிரச்சாரம் இருப்பதால் இந்த கதை ஈர்ப்புடையதாக இல்லை. லங்காதகனம்:          கதையின் போக்கு முதலிலிருந்தே ஊகிக்க கூடியதாக இருந்தது.மடத்தின் விவரிப்...

White Mughals - William Dalrymple

                 பதினெட்டாம் நாற்றாண்டின் இறுதியில் கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றிய ஓர் ஆங்கிலேய அதிகாரிக்கும்(ஜேம்ஸ் கிரிக்பட்ரிக்) இந்திய முகலாய ஆளும் வர்க பெண்ணுக்கும்  (கைர்-உன்-நிசா பேகமமுடன்) இடையிலான காதலை முன் வைத்து எழுதப்பட்ட வரலாற்று நூல்.White Mughals என்றால் இந்திய முகலாய மூஸ்லீம் பெண்களை மணந்த கிழக்கிந்திய கம்பெனியின் ஆங்கில அதிகாரிகள்.இவர்கள் மற்றைய ஆங்கில அதிகாரிகளை போல் சுரண்டல் ஒன்றையே குறிக்கோளாக கொள்ளாமல் இந்தியாவை கொஞ்சம் அனுதாபத்தோடு அணுகியுள்ளனர்.இப்படிபட்ட சிலபல அதிகாரிகளில் ஒருவர் ஜேம்ஸ் கிரிக்பட்ரிக்.      இந்த நூலின் நல்ல விஷயமென்பது நாம் White Mughals பற்றி மட்டும் தெரிந்து கொள்ளவில்லை.18ம் நூற்றாண்டில் எவ்வாறு முகலாய அரசுகள் இயங்கின என்பதைப் பற்றியும் ,ஹைதராபாத் நகரின் வரலாறு பற்றியும் விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.       William Dalrymple தனக்கு கிடைத்த ஆதாரங்களை வைத்து இந்நாலை சுவாரிஷ்யமாக  எழுதியுள்ளார்.ஆனால் White M...

இரவு - ஜெயமோகன்

                         பகலின் இடைவேளையை தவிர்த்தால் இரவுதான் தொடர்ச்சியானது.இரவே உண்மை வெளிப்படும் வெளி.பகலில் உண்மை மீது வெளிச்சம் எனும் போர்வை மூடப்பட்டு பாசாங்குகளே வெளிப்படுகின்றன.உண்மையை தாங்க முடியாத எளிய உள்ளங்களின் உலகமே பகல்.உண்மையை கண்டு அஞ்சாமல் , பகலின் பாசாங்குதனத்தில் வாழ முடியாதவர்களின் உலகமே இரவு.இரவிலேயே அழகு கூர் கொள்ளும்.மேற்சொன்னவற்றையே மையமாக வைத்து ஒரு புது அனுபத்தை ஒரு நாவலாக தந்திருக்கிறார் ஆசிரியர்.ஜெயமோகனின் மிகச்சிறந்த நாவல்களில் இதுவும் ஒன்று.        ஒரு அந்நியரான சரவணனை எப்படி முதல் சந்திப்பிலேயே மேனன் தம்பதியினர் அவ்வளவு அந்யோந்யமாக ஏற்று அவருக்கு பெண் பார்க்குமளவிற்கு செல்வார்கள் என்ற  நெருடல் முதலில் இருந்தாலும் , போகப்போக நாவல் பயனித்த தளமும் வேகமும் அந்த நெருடலை ஒன்றுமில்லாது செய்துவிட்டன.          ஜெயமோகனின் மற்ற நாவல்களைப் போலவே இதிலும்  எளிய மனிதர்களே இயற்கையை   முழுமையாக புரிந்து ...

The Last Mughal - William Dalrymple

         முதல் இந்திய சுதந்திரப்போர் என்று அழைக்கப்படும் சிப்பாய்கழகம் 1857ல் நடந்தது, பிரிட்டிஷ்ஷார் மாடு மற்றும் பன்றி கொழுப்பு தடவிய குண்டுகளை பயன்படுத்தியதால் இந்து மற்றும் முஸ்லீம் சிப்பாய்கள் புரட்சியில் ஈடுபட்டனர்.இதுவே என் புரிதல்.ஆனால் இந்த புத்தகம் படித்த பின்தான்  சிப்பாய்கழகத்திற்கான காரணங்கள் ஒன்றல்ல, பற்பல சிக்கலான காரணிகள்.இந்நூலாசிரியர் 1850கள் வாக்கில் டெல்லியில் நடந்த  அனைத்து நிகழ்வுகளையும்  விவரித்திருக்கிறார்.இந்த புத்தகத்தை படிக்கும் முன் இதே ஆசிரியர் எழுதிய The Ananarchy படித்திருந்தேன்.The Last Mughalம் அந்த நூலின் தொடர்ச்சியாகத்தான் எனக்குத் தெரிந்தது.சுருக்கமாக இந்த இரு நூல்களைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் அற்புதம்,அபாரம்.      இந்த ஆசிரியரின் சிறப்பென்பது முதலில்  அவரின் மொழிநடை.அடுத்தடுத்து நிகழ்வுகளை அடுக்கிச் சொல்லும் பாங்கு.ஒவ்வொரு நிகழ்வையும் இந்தியர்களின் பார்வையிலும் அதே நிகழ்வை ஆங்கிலேயர்களின் பார்வையிலும் சொல்லும் விதம்.நான் ஒரே ஒரு முறைதான் டெல்லி சென்றிருக்கிறேன்.ஆனால் மீண்டு...

The Anarchy - William Dalrymple

                                                எனக்கு தெரிந்த இந்திய வரலாறு என்பது 1947க்கு பின் நடந்தவை.அதற்கு முன்பான வரலாறென்பது துணுக்குச்செய்திகளாக தெரியுமே தவிர விரிவான பார்வை கிடையாது.பொதுவாக என் புரிதலென்பது 200 ஆண்டுகள் ஆங்கிலேய ஆட்சி அதற்கு முன் 800 ஆண்டுகள் முகலாயர்கள் ஆட்சி அதில் சில பெயர்கள் தவிர பெரிதாக எதுவும் தெரியாது.அவ்வப்போது படிக்கும் சில கட்டுரைகள்.இவையெல்லாம் துணுக்குச்செய்திகளாக தெரியுமே தவிர,ஒட்டுமொத்த வரலாறு தெரியாது.இந்த பின்னணியில் The Anarchy புத்தகம் 1600 முதல் 1800 வரையிலான இந்தியாவின் முழு வரலாற்றையும் விவரிக்கிறது.கிழக்கிந்திய கம்பெனி(EIC) தோன்றியதிலிருந்து அவர்கள் இந்தியாவை தங்கள் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது வரை மிகமிக விரிவாக சுவாரஸ்யமாக இந்த நூலின் ஆசிரியர் எழுதியுள்ளார்.இப்படிப்பட்ட ஒரு வரலாற்று நூல் இதற்கு முன் நான் படித்ததில்லை.       ஆசிரியர் இந்தியாவை ஆங்கிலேயர்...

வெண்முரசு - ஜெயமோகன்

சென்னை எழும்பூரில் நடைபெற்ற வெண்முரசு முதல் நான்கு நூல் வெளியீட்டு விழாவில்(கமல்,அசோகமித்ரன் பங்கேற்ற)  முதற்கனல் மற்றும் வண்ணப்பாடல் நூல்களை வாங்கினேன்.ஆனால் வாங்கியதை அப்படியே அலமாரியில் வைத்துவிட்டேன்.நான்கு ஆண்டுகள் கழித்துத்தான் படிக்க ஆரம்பித்தேன்.வெண்முரசு   படிக்க ஆரம்பித்த்திலிருந்து அடுத்த இரண்டாண்டுகள் வேறு எந்த புத்தகமும் படிக்கவில்லை.தொடர்ச்சியாக  26 பாகங்களையும் படித்து முடித்தேன்.வெண்முரசை முழுமையாக படித்து முடித்ததே என்னளவில் பெரும்சாதனை.இதை எழுதிய ஜெயமோகனுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். முதற்கனலில் மானசாதேவி,அவள் மகன் ஆஸ்திகன் அவர்களுடைய வீடு, காடு என அனைத்தும் என் கண்முன் உள்ளது.முதல் பாகத்திலிருந்து இறுதி பாகம் வரை இந்த நூலில் உள்ள அனைத்து இடங்களுக்கும் ஏதோ நானே நேரில் சென்று தொட்டுப்பார்த்ததாகவே உணர்கிறேன்.அவ்வளவு வர்ணனை.துரோனரின் இளமை பருவம் முதல் அவர் ஆசிரியர் ஆகும் வரை உள்ள காலம் ,அவர் வாழ்ந்த இடத்தின் வர்ணனை இன்றும் பசுமையாக என் கண்முன் உள்ளது.அவர் இளமைபருவம் படிக்கும் போது கொஞ்சம் பரிதாபமாக இருந்தது. வெண்முரசில் கிருஷ்ணர்(இளைய யாதவர்) என...

Zorba the Greek - Nikos Kazantzakis

இந்த நாவல் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்பதைத்தான் சொல்கிறது.இந்த கதை முழுவதும் சொல்லப்படுவது ஒரு பணக்கார,புத்தகபுழுவாக , எப்போதும் தத்துவ தேடலுடன் உள்ள ஒருவர் மூலமாக சொல்லப்படுகிறது.அவர் தற்செயலாக ஃகபே ஒன்றில் ஜோர்பாவை சந்திக்கிறார்.ஜோர்பா தனக்கு நன்றாக சமைக்கத் தெரியும் என்றும் Santuri இசை கருவியை நன்றாக வாசிக்கத் தெரியும் என்றும்  தனக்கு ஏதாவது வேலை கொடுத்தால் தங்களுடனே வந்துவிடுவதாகவும் கதைசொல்லியிடம் கேட்கிறார்.ஜோர்பாவின் பேச்சு ,தோற்றம் இவையெல்லாம் முதல் சந்திப்பிலேயே கதை சொல்லியை ஈர்க்கிறது.ஜோர்பாவை வேலைக்கு சேர்த்துக் கொள்கிறார்.அதற்குபின் ஜோர்பாவின் கடந்த காலம் துண்டுதுண்டாக விவரிக்கப்படுகிறது. ஜோர்பாவுக்கு மறுபிறவி,சொர்கம்,நரகம் போன்ற கருதுகோள்களில் நம்பிக்கையற்றவர்.ஜோர்பாவின் தத்துவப்படி கடவுளும் சாத்தானும் ஒன்றே.மகிழ்ச்சி என்பது இந்தப் பிறவியில் இந்த பூமியில் மட்டுமே சாத்தியம்.அதை இங்கு அனுபவிக்காமல் அது வேறு எங்கோ உள்ளது என்பதிலெல்லாம் நம்பிக்கையற்றவர். கதைசொல்லி வாழ்கை தொடர்பான தத்துவார்த்தமான கேள்விகளுக்கு விடைதேடி புத்தகத்தை நாடுகிறார்.தினசரி நடைமுறை வாழ்கையி...

The Man Who Knew Infinity - Robert Kanigel

  ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றை எப்படி எழுத வேண்டும் என்பதற்கு இந்த நூல் ஒரு சிறந்த உதாரணம்.இந்நூல் மூலம் ராமானுஜன் மேலும் G.H.Hardy மேலும் ஏற்படும் பெருமதிப்பு,வியப்பு இந்நூலாசிரியர் மேலும் ஏற்படுகிறது.காரணம் இந்நாலூக்காக அவர் செலுத்தியிருக்கும் உழைப்பு. ராமானுஜத்தின் கணிதம் எவ்வளவு சிக்கலானதோ அதேபோல அவர் வாழ்க்கையும் சிக்கலானது.காலத்தால் நூறு ஆண்டுகளுக்கு முந்தையது.ஆசிரியருக்கு இந்திய வாழ்கைமுறை மிக அண்ணியமானது.மேலும் நூறு ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்கைமுறை அவருக்கு மேலும் புரிந்து கொள்ள கடினமானது.இருந்தும் மிகச் சிறப்பாக இந்நாலை எழுதியிருக்கிறார். ராமானுஜனின் பிறப்பு முதல் அவரின் இறுதி காலம் வரை அவருடையப்  பயணத்தை அழகாக சொல்லியிருக்கிறார்.இது எந்த அளவுக்கு ராமானுஜனின் வரலாரோ அதே அளவுக்கு G.H.Hardyன் வரலாறும் ஆகும்.ஒருவகையில் ஒருவரை பிரித்து இன்னொருவர் வரலாற்றை எழுதிவிட முடியாது என்றளவிற்கு அவர்கள் பிணைப்புள்ளது. ராமானுஜன் ஒரு சுயம்புவாகவே கணிதம் கற்றிருக்கிறார்.அவர் கணிதப்புத்தகம் மூலம் தானே பயின்றிருக்கிறார்.எந்த முறையான கணிதப் பயிற்ச்சியும் அவருக்கில்லை.இது வரமா அல்லது...

The Selfish Gene - Richard Dawkins

  பொதுவாக நம்மிடம் ஒரு நம்பிக்கை உண்டு.அதாவது ஏலியன்கள் நம்மை விட அதி புத்திசாலிகளாக இருப்பார்கள்.ஏலியன்களையே பார்க்காமல் அவர்கள் நம்மைவிட புத்திசாலிகளாக இருப்பார்கள் என்று எவ்வாறு கூறமுடியும்.ஏனென்றால் மனிதர்களாகிய நம்மால் இதுவரை ஒரு விஷயத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.அதில் ஏலியன்கள் நம்மைவிட சிறந்தவர்களாக விடை தெரிந்தவர்களாக இருப்பார்கள் என நம்பப்படுகிறது.அந்த விஷயம் பூமியில் எவ்வாறு உயிர்கள் தோன்றின?இதற்கான விடை நம்மிடம் தற்போதுவரை இல்லை.நாம் கண்டுபிடித்ததெல்லாம் அனுமானங்கள்தான்(theory).திட்டவட்டமான விடை இல்லை.டார்வினின் பரிணாம வளர்ச்சிக்கொள்கைகூட ஓரு உயிரினத்திலிருந்து மற்றொரு உயிரினம் எவ்வாறு பரிணாம வளர்ச்சிப் பெற்றது என்பதைத்தான் சொல்கிறதே  தவிர எவ்வாறு உயிர்கள் தோன்றின என்பதைப் பற்றி சொல்லவில்லை. Richard Dawkins(RK) இந்த அடிப்படை கேள்விக்கான விடை தேடியே இந்த புத்தகத்தை ஆரம்பிக்கிறார்.அவர் கூற்றுப்படி பூமியில் உள்ள எந்த உயிரினத்திற்க்கும் (மனிதன்,விலங்கு,பறவை,பூச்சிகள்,மரம்,செடி,கொடி,தாவரங்கள்) அடிப்படை அலகு என்பது மரபணு(gene) தான்.டார்வின் தன் பரிணாம வளர்ச்சி கொள்கைய...

ஒற்றை வைக்கோல் புரட்சி - மசானபு ஃபுகோகோ

                           என் புரிதலில் இயற்கை விவசாயமென்றால் வேதிப்பொருள் கலந்த உரங்களைப் பயன்படுத்தாமல்,மரபனு கலப்பின விதைகளை பயன்படுத்தாமல் இயற்கையாக கிடைக்கும் விளைபொருட்களை கொண்டே செய்யப்படும் விவசாயம்.ஆனால் இந்த புத்தகத்தைப் படித்தபிறகு இன்னும் ஒரு படி மேலே சென்று நிலம் உழுதல் கூட இயற்கை விவசாயத்தில்(ஏர் பூட்டியோ அல்லது ட்ராக்டர் உதவியுடனோ) தேவையில்லாதது.எவ்வாறு காட்டில் யாருடைய முயற்சியுமின்றி மரங்கள் வளர்ந்து காய்கனிகள் காய்க்கின்றனவோ , அதேபோல விவசாயமும் இயற்கையிடமே விட்டுவிடப்படவேண்டும்.                விவசாயி விதைகளைத் மட்டும் தூவிவிட்டு அறுவடை செய்யும் வரை எந்த வேலையும் செய்யாமல் இருத்தலே போதுமானது.நிலம் உழுதலே இயற்கை வேளாண்மைக்கு தேவையில்லாத்து என்பது ஆச்சர்யமளிக்கும் செய்தி.பூச்சிகளும் மண்புழுக்களுமே தன்னிச்சையாக நிலம் உழுதலை செய்துவிடுகின்றன.நாமாக உழும்போது இப்படிப்பட்ட மண்புழுக்கள் இறப்பதற்க்கும் ,முளைக்கவே முடியாத களைச்செடிகள் முளைத்துவிடும் வாய்ப...

M. S. Subbulakshmi: The Definitive Biography - T.J.S.George

  நான் இந்த புத்தகத்தை படிப்பதற்க்கான முக்கிய காரணம் இதில் எம்.எஸ்.சுப்புலட்சுமி G.N.Bக்கு எழுதிய காதல் கடிதங்கள் உள்ளன என்பதால்தான்.இதை படித்து முடித்தபோது எம்.எஸ் பற்றிய ஒரு பிம்பம் கிடைத்தது.ஏற்கனவே அவர்  பற்றிய பிம்பத்தில் சிறிது மாற்றம் ஏற்ப்பட்டாலும் , எந்த சிதைவும் இல்லை.இதற்கு காரணம்  சிரு வயதிலிருந்தே அவரைப்பற்றிய செய்திகளை கேட்டே வளர்ந்திருக்கிறேன். எம்.எஸ் பற்றிய பிம்பமென்பது அவர் அலாதி பக்தியள்ளவர்.இசை ஒன்று மட்டுமே தெரிந்தவர்.கெஞ்சம் வெகுளி.கணவணே கண்கண்ட தெய்வம் என்றிருந்தவர்.இவை அனைத்தும் உண்மைதான்.ஆனால் அவர் ஒன்றும் தெரியாத அப்பாவி அல்ல.இந்த பிம்பம் திருமணத்திற்க்கு முன் எம்.எஸ் G.N.Bக்கு எழுதிய காதல் கடிதங்களால் உடையலாம் என சிலர் கருதலாம்.நான் அவ்வாறு நினைக்கவில்லை.இந்த கடிதங்கள் எம்.எஸ் ன் அக்காலத்திய மனவோட்டத்தை புரிந்து கொள்ள உதவலாம்.எம்.எஸ் தன் எதிர்காலத்தை கணக்கிட்டே தன்னுடைய காதல் முடிவுகளை எடுத்திருக்கிறார் என்றே இந்நூலாசிரியர் சொல்லவருகிறார்.நாம் அனைவருமே அப்படித்தான்.எதிர்காலத்தை மனதில் வைத்தே எதையும் செய்கிறோம்.எம்.எஸ் தான் வாழ்வில் அடைந்த உ...

Freedom at Midnight - Larry Collins & Dominique Lapierre

                                                            மவுண்ட்பேட்டன் கடைசி வைஸ்ராயாக பொருப்பேற்றதிலிருந்து(1947 தொடக்கம்) மஹாத்மா காந்தியின் மறைவுவரை இந்தியாவில் நடந்த நிகழ்ச்சிகளின் தொகுப்புதான் இந்த பத்தகம்.வெறும் இரண்டாண்டுகள்தான் என்றாலும்,இந்தியாவில் மிகப்பெரிய பல மாற்றங்கள் நடைபெற்ற காலம்.இந்திய சுதந்திரம்,இந்தியா பாகிஸ்தான் பிரிவினை,மஹாத்மா காந்தியடிகள் படுகொலை என பல முக்கிய நிகழ்ச்சிகள் நடந்த கொந்தளிப்பான காலகட்டம்.           இங்கிலாந்து பிரதமர் க்ளமண்ட் அட்லி  மவுண்ட்பேட்டனை புதிய வைஸ்ராயாக நியமிக்கிறார்.அவரிடம் தரப்பட்ட பொருப்பு இந்தியாவிற்க்கு விரைவில் சுதந்திரம் வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தல்.இது நடந்த்து 1947 தொடக்கம்.மவுண்ட்பேட்டன் தயக்கத்துடனேயே பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்.அதுவரை அவர் மத்திய ஆசியாவின் கப்பற்ப்படை தளபதியாக பொறுப்பேற்று சிறப்ப...

புலிநகக் கொன்றை - பி.ஏ.கிருஷ்ணன்

            தென்தமிழகத்தில் வாழ்ந்த தென்கலை ஐயங்கார் குடும்பத்தின் நான்கு தலைமுறை கதைதான் புலிநகக்கொன்றை . இதன் ஆசிரியர் அதே சமூகத்தைச் சேர்ந்தவரென்றாலும்,ஒரு பரிவுடன் இதை எழுதவில்லை.ஒவ்வொரு கதாபாத்திரத்தின் சித்தரிப்பும் விரிவானவை.கதைச்சித்தரிப்பும் ஒரே காலவரிசையில் இல்லாமல் கடந்த காலமும் நிகழ்காலமும்  மாறிமாறி வருகின்றன.      பொன்னா பாட்டி,நம்மாழ்வார்,நம்பி.கண்ணன் கதாபாத்திரங்கள் விரிவாக சித்தரிக்கப்பட்டுள்ளன.பட்சி,திருமலை,மதுரகவி,ராதா கதாபாத்திரங்கள் மிக குறைவாக விவரிக்கப்பட்டுள்ளனர்.ஆண்டாள்,ரோசா  கதாபாத்திரங்கள் பரவாயில்லை .      இளம்  விதவைகளிண் அன்றைய பரிதாபத்துக்குரிய நிலை ஆண்டாள் கதாபாத்திரம் மூலம் துல்லியமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண் இதைப்போல் இருந்திருப்பாள்.ஆண்டாளின் தந்தை ஜீயரிடம் தன் மகள் மறுமணம் பற்றி யோசனை கேட்க ,அவர்   அது   வைஸ்ணவ சம்பிரதாயத்திற்க்கு  எதிராணததென்று அனுமதி மறுக்க,ஆண்டாளின் வாழ்க்கையே தடம் புரள்கிறது.      ...

சரவணபவன் உரிமையாளர் இராஜகோபால் அவர்களின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்

சரவணபவன் உரிமையாளர் இராஜகோபால் அவர்களின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்.     இந்த புத்தகத்தின் ஆரம்பமே ஒரு த்ரில்லர் படத்தின் ஆரம்பம் போன்றுதான் இருந்தது.கொடைக்கானல் போலிஸ் மலையடிவாரத்தில் அழுகும் நிலையில் ஒரு ஆண் பிணத்தை கண்டுபிடிக்கிரார்கள்.அது யார் என்று அடையாளம் தெரியாததால், பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்கிரார்கள்.அதிலிருந்து புத்தகம் இராஜகோபால் அவர்களின் இளமை காலத்திற்க்கு திரும்புகிறது.     தென்கோடி தமிழகத்தின் ஒரு குக்கிராமத்தில் ஒரு சாதாரண கீழ்நடுத்தரவர்க  குடும்பத்தில் பிறக்கிறார்.இளமையிலிருந்தே தாயின் மூலம் முருக பக்தியுடன் வளர்கிறார்.பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிருத்திவிட்டு, சிறு சிறு வேலைகள் செய்து ,கடைசியாக தன் 15ம் வயதில் சென்னைக்கு வருகிறார்.கே.கே.நகரில் மளிகை கடையில் வேலை பார்க்க ஆரம்பித்தவர்,வெகுவிரைவிலேயே சொந்த தொழில் ஆரம்பிக்க முனைகிறார்.     அந்த காலகட்டத்தில் கே.கே.நகரில் நல்ல உணவகங்கள் இல்லாத நிலையில்,சரவணபவன் ஆரம்பிக்கிறார்.இந்நிலையில் இப்புத்தகம் 1980 வாக்கில் சென்னையின் ஹோட்டல் நிலவரமும் மக்களின் உணவு பழக்கவழக்க...

Tiananmen Square: The Making of a Protest - Vijay Gokhale

                               சீனாவைப் பற்றி நான் படித்த முதல் புத்தகம் 'Three Daughters of China" by Jung Chang.இந்நூல் ஆசிரியர் தன் பாட்டி,அம்மா மற்றும் தன்னுடைய வாழ்கை வரலாற்றின் வழியாக சீனாவின் அந்தந்த காலகட்டத்து சூழ்நிலையை அழகாக பதிவு செய்கிறார்.கடந்த நூறாண்டு சீனாவைப் பற்றி தெரிந்துகொள்ள இந்த புத்தகம் நல்ல ஆரம்பம்.இரண்டாவது பத்தகம் ' விலகும் திரை ' by பல்லவி ஐயர்.இந்த புத்தகம் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் சீனாவைப் பற்றியது.                சமீபத்தில் நான் படித்த பத்தகம் ' The Tinanmen Square " by  Vijay Gokale.இந்த பத்தகம் 1990வாக்கில் பீஜ்ஜிங்கில் உள்ள தினான்மென் சதுக்கத்தில் நடந்த மாணவர் போராட்டம்,அதை தொடர்ந்து சீன கம்யூணிஸ்ட் அரசாங்கம் அவர்கள் மீது நடத்திய கொடுமையான தாக்குதல் பற்றியது.இந்த வன்முறை தாக்குதலில் ஆயிரத்திற்க்கும் மேலான மாணவர்கள் பலியாகியிருக்க்க்கூடும் என்று நம்ப்ப்படுகிறது.இந்நூல் ஆசிரியர் இந்திய வெளியுறவுத்துறையின் செயலாளரா...