இந்த நாவல் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்பதைத்தான் சொல்கிறது.இந்த கதை முழுவதும் சொல்லப்படுவது ஒரு பணக்கார,புத்தகபுழுவாக , எப்போதும் தத்துவ தேடலுடன் உள்ள ஒருவர் மூலமாக சொல்லப்படுகிறது.அவர் தற்செயலாக ஃகபே ஒன்றில் ஜோர்பாவை சந்திக்கிறார்.ஜோர்பா தனக்கு நன்றாக சமைக்கத் தெரியும் என்றும் Santuri இசை கருவியை நன்றாக வாசிக்கத் தெரியும் என்றும் தனக்கு ஏதாவது வேலை கொடுத்தால் தங்களுடனே வந்துவிடுவதாகவும் கதைசொல்லியிடம் கேட்கிறார்.ஜோர்பாவின் பேச்சு ,தோற்றம் இவையெல்லாம் முதல் சந்திப்பிலேயே கதை சொல்லியை ஈர்க்கிறது.ஜோர்பாவை வேலைக்கு சேர்த்துக் கொள்கிறார்.அதற்குபின் ஜோர்பாவின் கடந்த காலம் துண்டுதுண்டாக விவரிக்கப்படுகிறது. ஜோர்பாவுக்கு மறுபிறவி,சொர்கம்,நரகம் போன்ற கருதுகோள்களில் நம்பிக்கையற்றவர்.ஜோர்பாவின் தத்துவப்படி கடவுளும் சாத்தானும் ஒன்றே.மகிழ்ச்சி என்பது இந்தப் பிறவியில் இந்த பூமியில் மட்டுமே சாத்தியம்.அதை இங்கு அனுபவிக்காமல் அது வேறு எங்கோ உள்ளது என்பதிலெல்லாம் நம்பிக்கையற்றவர். கதைசொல்லி வாழ்கை தொடர்பான தத்துவார்த்தமான கேள்விகளுக்கு விடைதேடி புத்தகத்தை நாடுகிறார்.தினசரி நடைமுறை வாழ்கையி...
I write book reviews here