தென்தமிழகத்தில் வாழ்ந்த தென்கலை ஐயங்கார் குடும்பத்தின் நான்கு தலைமுறை கதைதான் புலிநகக்கொன்றை. இதன் ஆசிரியர் அதே சமூகத்தைச் சேர்ந்தவரென்றாலும்,ஒரு பரிவுடன் இதை எழுதவில்லை.ஒவ்வொரு கதாபாத்திரத்தின் சித்தரிப்பும் விரிவானவை.கதைச்சித்தரிப்பும் ஒரே காலவரிசையில் இல்லாமல் கடந்த காலமும் நிகழ்காலமும் மாறிமாறி வருகின்றன.
பொன்னா பாட்டி,நம்மாழ்வார்,நம்பி.கண்ணன் கதாபாத்திரங்கள் விரிவாக சித்தரிக்கப்பட்டுள்ளன.பட்சி,திருமலை,மதுரகவி,ராதா கதாபாத்திரங்கள் மிக குறைவாக விவரிக்கப்பட்டுள்ளனர்.ஆண்டாள்,ரோசா கதாபாத்திரங்கள் பரவாயில்லை .
இளம் விதவைகளிண் அன்றைய பரிதாபத்துக்குரிய நிலை ஆண்டாள் கதாபாத்திரம் மூலம் துல்லியமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண் இதைப்போல் இருந்திருப்பாள்.ஆண்டாளின் தந்தை ஜீயரிடம் தன் மகள் மறுமணம் பற்றி யோசனை கேட்க ,அவர் அது வைஸ்ணவ சம்பிரதாயத்திற்க்கு எதிராணததென்று அனுமதி மறுக்க,ஆண்டாளின் வாழ்க்கையே தடம் புரள்கிறது.
கதை முழுதும் ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு துர் மரணம்.பொன்னாவின் தாத்தா ஆங்கிலேய ஆட்சியில் துப்பாக்கி சூட்டில் மடிகிறார்.பொன்னாவின் மாமியார் மறவர்களின் கொள்ளையின் போது கொல்லபப்படுகிறார்.பொன்னாவின் பேரனும்,கொள்ளுப்பேரனும் அரசியலியக்க செயல்பாடுகளால் கொல்லப்படுகிறார்கள்.பொன்னாவின் மகன் நம்மாள்வார் மட்டும் துறவறம் மேற்கொண்டு தப்பித்து கொள்கிறார்.
கதையில் அங்அங்கே சில surpriseகள் உண்டு.ஆண்டாளுக்கு பாம்புக்கடி பட்ட அன்றைய இரவில் நடந்த சம்பவங்களில் நாமொன்று நினைக்க ,நடந்தது வேறு.நம்பி உண்மையிலேயே குற்றாலத்திலிருந்து புனலூருக்குச் சென்றது தற்செயலானதென்றாலும், நக்சலைட் முகுந்தன் மேனனை சந்தித்திருக்கவே வாய்ப்புகள் அதிகம்.கதை முழுதும் தீவிர அரசியல் சார்படைய அனைவரும் ஏமாற்றத்தையே அடைகிறார்கள்.
நாவல் முழுதும் வரும் மேற்கோள்கள்,ஆங்கில,தமிழ் கவிதைகள்,அந்தந்த காலத்திய புத்தகங்கள் அனைத்தும் ஆசிரியரின் பரந்துபட்ட வாசிப்பையும் விசாலமாண பார்வையும் புலப்படுத்துகின்றன.
பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய நாவல்களில் நான் முதலில் படித்த்து கலங்கிய நதி.அது அஸ்ஸாமில் நடந்த கடத்தல் சம்பவம் பற்றியது.அது நல்ல நாவல் என்றாலும்,விரைவாக பயணம் செய்ததுபோல் இருந்த்து.ஆனால் புலிநகக் கொன்றை நிறுத்தி நிதானமாக ஒரு மூன்று தலைமுறைப் பயணம்.இதில் வரும் கதாபாத்திரங்கள் நீண்டநாள் நம் நினைவில் பயணம் செய்வார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக