முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

M. S. Subbulakshmi: The Definitive Biography - T.J.S.George


  நான் இந்த புத்தகத்தை படிப்பதற்க்கான முக்கிய காரணம் இதில் எம்.எஸ்.சுப்புலட்சுமி G.N.Bக்கு எழுதிய காதல் கடிதங்கள் உள்ளன என்பதால்தான்.இதை படித்து முடித்தபோது எம்.எஸ் பற்றிய ஒரு பிம்பம் கிடைத்தது.ஏற்கனவே அவர்  பற்றிய பிம்பத்தில் சிறிது மாற்றம் ஏற்ப்பட்டாலும் , எந்த சிதைவும் இல்லை.இதற்கு காரணம்  சிரு வயதிலிருந்தே அவரைப்பற்றிய செய்திகளை கேட்டே வளர்ந்திருக்கிறேன்.

எம்.எஸ் பற்றிய பிம்பமென்பது அவர் அலாதி பக்தியள்ளவர்.இசை ஒன்று மட்டுமே தெரிந்தவர்.கெஞ்சம் வெகுளி.கணவணே கண்கண்ட தெய்வம் என்றிருந்தவர்.இவை அனைத்தும் உண்மைதான்.ஆனால் அவர் ஒன்றும் தெரியாத அப்பாவி அல்ல.இந்த பிம்பம் திருமணத்திற்க்கு முன் எம்.எஸ் G.N.Bக்கு எழுதிய காதல் கடிதங்களால் உடையலாம் என சிலர் கருதலாம்.நான் அவ்வாறு நினைக்கவில்லை.இந்த கடிதங்கள் எம்.எஸ் ன் அக்காலத்திய மனவோட்டத்தை புரிந்து கொள்ள உதவலாம்.எம்.எஸ் தன் எதிர்காலத்தை கணக்கிட்டே தன்னுடைய காதல் முடிவுகளை எடுத்திருக்கிறார் என்றே இந்நூலாசிரியர் சொல்லவருகிறார்.நாம் அனைவருமே அப்படித்தான்.எதிர்காலத்தை மனதில் வைத்தே எதையும் செய்கிறோம்.எம்.எஸ் தான் வாழ்வில் அடைந்த உச்சங்கள் அனைத்தையும்  அடையவேண்டும் என முன்னறே கணித்திருக்க முடியாது.ஆனால்  அவர் வாழ்கை அவரை உச்சத்திற்க்கு கொண்டுவந்துவிட்டது.

இந்திய வரலாறு நெடுக கலாச்சாரரீதியாக மிகப்பெரிய பங்களிப்பாற்றிய இசை வேளாளர் (தேவரடியார்) மரபில் வந்த ஒருவருக்கு பாரத ரத்னா உட்பட அனைத்து விருதுகளும் கௌரவங்களும் கிடைத்திருப்பது அந்த சமுதாயத்திற்க்கே செய்யப்பட்ட சிறிய கௌரவமாக கருதுகிறேன்.இதற்க்காக பாடுபட்ட அவருடைய கணவர் சதாசிவத்தின் பங்களிப்பு அபாரமானது.

சதாசிவம் பற்றி நிறைய தகவல்கள் உள்ளன.ஆனால் அவரைப்பற்றிய முழுப்பிம்பம் கிடைத்தமாதிரி தெரியவில்லை.ஏதோ குறைகிறது.(ஒரு உதிரித் தகவல், சதாசிவத்துடன் உடன்பிறந்தவர்கள் அவரையும் சேர்த்து மொத்தம் 16.இதில் விஷேசம் என்னவென்றால் அவருடைய அம்மா அவர் அப்பாவிற்க்கு இரண்டாவது மனைவி.முதல் மனைவி மூலம் மேலும் இரண்டு குழந்தைகள்.ஆக மொத்தம் 18 குழந்தைகள். சதாசிவத்தின் தாய் தன் கடைசி காலத்தில் சந்யாசம் பெற்று காசிக்கு சென்றுவிட்டார்).

இந்த புத்தகம் எம்.எஸ்யை ஒரு வெள்ளந்தியாகவே காட்துகிறது.ஆனால் அவருடைய இளமைகால காதல் கடிதங்கள் அவர் அவ்வாறு இல்லை என்று காட்டுகிறது.இந்த பிம்பம் எம்.எஸ் என்றில்லை.நம் பாட்டிகள் எல்லாரையும் நாம் ஒரு வெள்ளந்தியாகத்தான் நினைக்கிறோம்.அது அவர்கள் இயல்பாகவே இருக்கலாம்(நான் அது நடிப்பு என்று நினைக்கவில்லை).ஆனால் அவர்களுக்கும் ஆசாபாசங்கள் இருந்திருக்கும்.எம்.எஸ்ன் கடிதங்கள் கிடைத்துவிட்டது.நம் பாட்டிகளின் கடிதங்கள் கிடைக்கவில்லை.அவ்வளவுதான் வேறுபாடு.இதனால் அவர்களின் நடத்தையிலோ அல்லது பண்பிலோ நான் எந்த தவரையும் உணரவில்லை.நம் புரிதல்தான் தவறானது.

இது ஒரு இசை மேதை பற்றிய வரலாற்று புத்தகம்.ஆனால் இசைப் பற்றிய குறிப்புகள் மிகக்குறைவு.அங்கங்கே ராகங்கள் பெயரை குறிப்பிடுகிறார்.மற்றபடி ஆசிரியருக்கு இசை பற்றிய ஞானமில்லை என்பது தெரிகிறது.இவருக்கு கர்னாடசங்கீதம் தெரிந்திருந்தால் ,இந்த பத்தகம் மேலும் சிறப்பாக வந்திருக்கும்.யாரோ எம்.எஸ்-G.N.B கடிதங்கள் பற்றி செல்லியிருக்க்க்கூடும்.அதற்காகவே இந்த பத்தகம் எழுதியிருப்பார்.ஏதோ இந்த புத்தகம் எழுதும்போது நடுவே G.N.B.க்கு வேண்டிய சிலர் கொடுத்த்தாக சொல்கிறார்.

எம்.எஸ்ன் வாழ்கையில் மிக முக்கியமான காலகட்டமென்பது 1940-1990 வரை.இந்த காலகட்டத்திய அரசியல் பற்றிய குறிப்பகள் மிக்க்குறைவு.இராஜாஜி,கல்கி பற்றிய செய்திகள் உள்ளன.ஆனால் திராவிட இயக்கம் பற்றிய செய்திகள் சுத்தமாக இல்லை. எம்.எஸ் தமிழக அரசியல் பற்றி என்ன நினைத்தார்? தேவதாசி ஒழிப்புச் சட்டம் பற்றிய அவர் அவிப்ராயம் என்ன? எந்த தகவலுமில்லை.ஆசிரியர் எழுதியவற்றை சிறப்பாக எழுதியிருக்கிறார்.ஆனால் பல விஷயங்கள்,பல தளங்களை அவர் தொடவேயில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Crime and Punishment

                                                   ராஸ்கோல்நிகோவ் என்னும் இளைஞன் இரு கொலைகளைச் செய்கிறான்.ஏன் இந்த கொலைகளை செய்தான்?கொலைக்கு பின்னான அவன் மனப்போராட்டம் .இதையேயே மையமாக வைத்து   எழதபட்ட மிகமிக சுவார்ஸ்யமான,விருவிருப்பான நாவல்.இது வெறும் துப்பரியும் நாவல் மட்டும் இல்லை.             ராஸ்கோல்நிகோவ் ஒரு மதுபான விடுதியில் தற்செயலாக மார்மல்யாடோவை சந்திக்கிறான்.மார்மல்யாடோவ் தன் சோக கதையை ராஸ்கோல்நிகோவிடம் விவரிக்கிறார்.ஒட்டுமொத்த நாவலிலும் மிகச் சிறந்த பகுதி என்று இதைத்தான் குறிப்பிடுவேன்.மார்மல்யாடோவ் தன் முதல் மனைவி மூலம் பெற்ற மகள் சோபியா(சோனியா).பதின்ம வயது.முதல் மனைவி இறந்தவுடன் இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார்.அவரின் இரண்டாம் மனைவிக்கும்(கட்ரினா இவானோவ்னா) இது இரண்டாம் திருமணம்.அவரின் முதல் திருமணம் மூலம் ஏற்கனவே மூன்று குழந்தைகள்.மூவரும் பால்ய வயதினர்.மார்மல்யாடோவ் தன் குடும்பத்த...

Sapiens: A Brief History of Humankind - Yuval Noah Harari

                     இது நான் மிகுந்த ஆவலுடன் படிக்கத் துவங்கிய நூல்.ஆனால் படித்து முடிக்கும் போது மிகுந்த ஏமாற்றத்துடன் இருந்தது.ஹராரி ஒரு பிரசாரகர்(propagandist).காலனியாதிக்கம்,முதலாளித்துவம்,மேற்கத்திய மேட்டிமைவாதம் இவைகளின் பிரசாரகர்.இந்த நூலில் எனக்கிருந்த பிரச்சனைகளை கீழே பட்டியலிடுகிறேன்.               ஆதிகாலத்தில்  மனிதன் அமெரிக்காவிற்க்கும், ஆஸ்திரேலியாவிற்க்கும் முதன்முதலில் குடியேறிய நாட்களில்  அங்கு அவர்கள் செய்ததாக சொல்லப்படும் செயல்கள் ஊகங்களே(எ.கா.பெரும்பான்மையான அரிய வகை விலங்குகளை கொன்றொழித்தது).அதற்கு எந்தவித உறுதியான ஆதாரங்களும் இல்லை.ஆனால் ஹராரி எல்லாவற்றையும் விலாவாரியாக ஏதோ நேரில் பார்த்தவர் போல்  விவரிக்கிறார்.ஏன் இவ்வாறு செய்கிறார் என்பது நூலின் பிற்பகுதியை படிக்கும் போதுதான் புரிகிறது.மேற்கத்தியர்கள் காலனியாதிக்கதின் போது அவர்கள் செய்த கொடுஞ்செயல்களை ஆதிகால பழங்குடியினர் செய்த செயல்களோடு ஒப்பிடும் போது ஒன்றுமில்லை என உணர்த்தத்தான் அவ்வாறு எழுதியிருக...

ஜெயமோகன் குறுநாவல்கள்

                         கிளிக்காலம்:          ஒரு விடலைச்சிறுவன் பெரியவனாகும் கதை.ஜெயமோகன் தரத்தில் இது சுமார் கதை.ஆனால் இதிலும் நல்ல விவரணை.கதை களத்தை கண்முன் காட்டும்படி விவரித்திருக்கிறார். பூமியின் முத்திரைகள்:          இது சுமாரான கதை.நண்பனின் இறப்பை ஒட்டி அவன் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.இதில் வரும் விவரணைகள் எதுவும் கவரவில்லை.      மடம்:         இது முழுக்க முழுக்க கிண்டல்.இதில் மடத்தின் குருவையோ , குருவிற்க்கு அடுத்ததாக வரும் பண்டாரத்தையோ கிண்டல் செய்யவில்லை.கிண்டல் முழுக்க கனபாடிகளைத்தான்.தமிழ்நாட்டில் திராவிட கழகங்கள் இல்லாத நிலையில் இக்கதை சுவாரிஸ்யமாக இருந்திருக்கும்.ஆனால் இங்கு நாளொரு மேனியும் இதே போன்ற பிரச்சாரம் இருப்பதால் இந்த கதை ஈர்ப்புடையதாக இல்லை. லங்காதகனம்:          கதையின் போக்கு முதலிலிருந்தே ஊகிக்க கூடியதாக இருந்தது.மடத்தின் விவரிப்...