ஊமைச்செந்நாய் - ஜெயமோகன்

காடன் விளி:

        இந்த தொகுப்பில் மிகச் சிறந்த கதையென எனக்குப் படுவது இது தான்.விளி என்றால் அழைத்தல்.அதாவது காடனை அழைத்தல் என்பதே தலைப்பு.இந்த கதையை தந்தை வழி சமூகமான நமக்கு(தமிழ் மக்களுக்கு) புரிந்துகொள்ள அல்லது ஏற்றுக் கொள்ள சிறிது கடினமாக இருக்கலாம்.பெண்களின் காம தவிப்பை விவரிக்கும் கதையாகவே நான் புரிந்து கொள்கிறேன்.கதை சொல்லியான சிறுவன்  வீட்டில் வேலை செய்யும் ஒருவர், ஏதோ நேர்ச்சைக்காக வெளியே(?) சென்றிருக்கும் போது,சிறுவனும் அவன் அப்பாவும் வீட்டிற்க்குள் தங்காமல், வெளியே உறங்குகிறார்கள்.எனக்கு தி.ஜா. எழுதிய அம்மா வந்தாள் தான் ஞாபகம் வந்தது.கதையின் முடிவில் காடன் மலையிலிருந்து பாறைகள் உருண்டு விழாததால் இது ஒரு பாவச் செயல் அல்ல என்பதாக புரிந்து கொள்ளலாம். எருமை மாட்டின் கூர்மையான மழுங்கிய கொம்பை பற்றிய விவரணை பலே :) !!