சீனாவைப் பற்றி நான் படித்த முதல் புத்தகம் 'Three Daughters of China" by Jung Chang.இந்நூல் ஆசிரியர் தன் பாட்டி,அம்மா மற்றும் தன்னுடைய வாழ்கை வரலாற்றின் வழியாக சீனாவின் அந்தந்த காலகட்டத்து சூழ்நிலையை அழகாக பதிவு செய்கிறார்.கடந்த நூறாண்டு சீனாவைப் பற்றி தெரிந்துகொள்ள இந்த புத்தகம் நல்ல ஆரம்பம்.இரண்டாவது பத்தகம் 'விலகும் திரை' by பல்லவி ஐயர்.இந்த புத்தகம் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் சீனாவைப் பற்றியது.
சமீபத்தில் நான் படித்த பத்தகம் 'The Tinanmen Square" by Vijay Gokale.இந்த பத்தகம் 1990வாக்கில் பீஜ்ஜிங்கில் உள்ள தினான்மென் சதுக்கத்தில் நடந்த மாணவர் போராட்டம்,அதை தொடர்ந்து சீன கம்யூணிஸ்ட் அரசாங்கம் அவர்கள் மீது நடத்திய கொடுமையான தாக்குதல் பற்றியது.இந்த வன்முறை தாக்குதலில் ஆயிரத்திற்க்கும் மேலான மாணவர்கள் பலியாகியிருக்க்க்கூடும் என்று நம்ப்ப்படுகிறது.இந்நூல் ஆசிரியர் இந்திய வெளியுறவுத்துறையின் செயலாளராகவும்,சீனாவின் இந்திய தூதராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இந்த சம்பவம் நிகழ்ந்தபோது பீஜ்ஜிங்கிலேயே இந்திய தூதரகத்தில் பணியாற்றியுள்ளார்.
மேற்குலகு ஊடகங்கள் இந்த சம்பவம் ஏதோ சீன மாணவர்கள் ஜனநாயகத்திற்க்காக போராடியதாகவும் சீன கம்யுணிஸ்ட் கட்சி விரைவில் அதிகாரத்தை இழந்துவிடும் என்றும் செய்தி வெளியிட்டன.ஆனால் கடந்த முப்பது ஆண்டுகளில் சீனாவில் நடந்ததோ வேறு.கம்யுணிஸ்ட் கட்சி தன் அதிகாரத்தை மேலும் பலப்படுத்தி கொண்டதோடல்லாமல்,மீண்டும் மாணவர் போராட்டமோ அல்லது எந்தவொரு சிறு போராட்டமோ தலையெடுக்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.சீனாவில் ஜனநாயகம் மலருவதற்க்கான எந்த நம்பிக்கை கீற்றும் தெரியவில்லை.மேற்குலகு ஊடகங்கள் முற்றிலும் தவறாக கணித்துவிட்டன.
மாசேதுங் மறைவிற்க்குப் பிறகு சீனாவின் பொருளாதார கொள்கைகளில் தலைகீழ் மாற்றங்கள் ஏற்ப்பட்டன.அதன் முக்கிய காரணகர்தா டிங் ஜியோப்பிங்.மாசேதுங் மறைவிற்க்குப் பிறகு சீனாவின் முக்கிய தலைவரானவர்.டிங் மாவிடமிருச்து பொருளாதார கொள்கையில் மட்டுமே மாறுபட்டாரேவொழிய,அரசியல் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை.ஒற்றைக்கட்சி ஆட்சிமுறைதான் சீனாவிற்க்கு உகந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லாதவர்.
டிங் தன் பொருளாதார திட்டத்தினை செயல்படுத்த, கட்சியிலும் ஆட்சியிலும் இளந்தலைமுறை தலைவர்களை நியமித்தார்.அவர்களுக்கிடையேயான போட்டாபோட்டி காரணமாகவும் அரசியல் கொள்கைகளில் டிங்ஙின் நிலைப்பாடு என்ன என்பதில் அவர்களுக்கிருந்த தவறான கணிப்பினாலும்,சில தவறான கொள்கை முடிவுகளை(கம்யுணிஸ்ட் கட்சியை பொருத்தவரை) எடுக்கிறார்கள்.சிறிது ஊடக சுதந்திரம்,கல்லூரிகளில் அரசாங்கத்தை விமர்சித்து ஆய்வுக்கூட்டம் நடத்தவும் அனுமதியளிக்கப்படுகிறது.
அவ்வாறு ஊழலுக்கெதிராக சிறுசிறு கூட்டங்கள் கல்லூரிகளில் நடைபெற்று வந்த நிலையில்,பிரபல கம்யூணிஸ்ட் கட்சித் தலைவர் ஒருவர் காலமாகிறார்.அவருக்கஞ்சலி செலுத்த கல்லூரி மாணவர்கள் தினான்மென் சதுக்கத்தில் கூடுகிறார்கள்.அஞ்சலி கூட்டம் விரைவில் ஊழலுக்கெதிரான போராட்டமாக மாறுகிறது.அதற்கு பொதுமக்கள் ஆதரவும் ஊடக ஆதரவும் கிடைக்கின்றன.இந்நிலையில் சோவியத்யூனியன் அதிபர் சீனாவிற்க்கு வருகை தருகிறார்.அவர் வருகையின் போது மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற வலியுருத்தப்படுகிறார்கள்.மாணவர்கள் அதை நிராகரித்து,தொடர்ந்து போராடுகிறார்கள்.சோவியத் அதிபர் சொன்றபின்,சீன கம்யூணிஸ்ட் கட்சி மாணவர் போராட்டத்தை தன் வழியில் முடிவுக்கு கொண்டுவருகிறது.
கடந்த முப்பது ஆண்டுகளாக சீனாவிற்க்கு வெளியில்தான் இச்சம்பவம் நினைவுகூரப்படுகிறதே தவிர,சீனாவில் இது முற்றாக மக்கள் நினைவிலிருந்து அகற்றப்பட்டுவிட்டது.என்னதான் பொருளாதார வளர்ச்சி எட்டினாலும்,உலக வல்லரசாக மாறினாலும்,அடக்குமறையில் பிரச்சனையை தற்காலிகமாக தீர்த்தாலும்,என்றேனும் அக்கினிக்குஞ்சொன்று காட்டை அழிக்கத்தான் செய்யும்.
ஆசிரியர் எந்தவித மிகைப்படுத்தலும் இல்லாமல் அன்றாட சீன அரசியல் நிகழ்வுகளை ஆராய்ந்து இச்சம்பவத்தை அணுகியிறுப்பது இந்நூலின் சிறப்பு.
கருத்துகள்
கருத்துரையிடுக