முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

The Anarchy - William Dalrymple

                                 The Anarchy : Dalrymple, William: Amazon.in: Books 

      எனக்கு தெரிந்த இந்திய வரலாறு என்பது 1947க்கு பின் நடந்தவை.அதற்கு முன்பான வரலாறென்பது துணுக்குச்செய்திகளாக தெரியுமே தவிர விரிவான பார்வை கிடையாது.பொதுவாக என் புரிதலென்பது 200 ஆண்டுகள் ஆங்கிலேய ஆட்சி அதற்கு முன் 800 ஆண்டுகள் முகலாயர்கள் ஆட்சி அதில் சில பெயர்கள் தவிர பெரிதாக எதுவும் தெரியாது.அவ்வப்போது படிக்கும் சில கட்டுரைகள்.இவையெல்லாம் துணுக்குச்செய்திகளாக தெரியுமே தவிர,ஒட்டுமொத்த வரலாறு தெரியாது.இந்த பின்னணியில் The Anarchy புத்தகம் 1600 முதல் 1800 வரையிலான இந்தியாவின் முழு வரலாற்றையும் விவரிக்கிறது.கிழக்கிந்திய கம்பெனி(EIC) தோன்றியதிலிருந்து அவர்கள் இந்தியாவை தங்கள் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது வரை மிகமிக விரிவாக சுவாரஸ்யமாக இந்த நூலின் ஆசிரியர் எழுதியுள்ளார்.இப்படிப்பட்ட ஒரு வரலாற்று நூல் இதற்கு முன் நான் படித்ததில்லை.
      ஆசிரியர் இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்டதை விட பெரும்பாலும் EIC தான் ஆண்டது,பெரும்பாலான கொள்ளை என்பது EICஆல் தான் நடந்தது , ஒரு வணிக நிறுவனம் எந்த கட்டுப்பாடும் இல்லாமலிருந்தால் அதன் சுரண்டல் எவ்வாறு இருக்கும் என்பதற்கு EICஐ  உதாரணம் காட்டுகிறார்.ஆசிரியர் இந்திய காலணியாதிக்கதிற்க்கு EICஐ பொருப்பாக்கிவிட்டு ஆங்கிலேயரசை தப்பிக்கவைக்க நினைக்கிறாரோ என்று ஐயம் எழுகிறது.என்ன நோக்கம் இருந்தாலும் இந்த நூல் மிக சுவாரிஸ்யமான முக்கியமான நால் என்றே கருதுகிறேன்.
      1599ல் எப்படி EIC ஆரம்பிக்கப்பட்டது?அதன் நோக்கம் என்ன?அன்றைய இங்கிலாந்து நாட்டின் நிலை என்ன?மற்றைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் போது இவர்களின் நிலை என்ன?அவர்கள் எவ்வாறு இந்தியா வந்தார்கள்?இந்திய முகலாய அரசுகள் அவர்களை எவ்வாறு அணுகின?எவ்வாறு அவர்கள் மெல்ல மெல்ல ஒவ்வொருவரையாக வீழ்த்தினர்?கடைசியில் மொத்த இந்தியாவையும் எவ்வாறு கைப்பற்றினர்? இவை அனைத்தையுமே மிக விரிவாக விளக்கியிருக்கிறார்.இது வரலாற்று நூல் என்பதைவிட ஒரு நாவல் போல கண்முன்னே நடப்பதை போல் எழுதியிருக்கிறார்.
      என் பார்வையில் ஆங்கிலேயர்கள் முதல் நூறாண்டுகள் வியாபாரம் மட்டும் செய்து அடுத்த நூறாண்டுகளில் முழு இந்தியாவையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடிந்ததற்க்கு முக்கிய காரணம் வலிமையான மைய அரசு இல்லாததுதான்.  முகலாயர்கள் இருந்தாலும் அவர்கள் ஆட்சியென்பது வடஇந்தியா மட்டும்தான்.பிற பகுதிகள் அனைத்தும் சிறுசிறு அரசுகள்தான்.ஒருங்கிணைந்த வலிமையான மைய அரசு இல்லாதபட்சத்தில் மீண்டும் அந்நியர் ஆதிக்கம் என்பது உறுதி.
  இந்த வரலாற்றின் மற்றொரு பாடம் வலிமையான இராணுவம் ஒரு நாட்டின் பாதுகாப்பிற்க்கு எவ்வளவு  இன்றியமையாதது என்பது.வல்லரசு வேண்டாம் நல்லரசு மட்டும் போதும் என்ற கோஷங்கள் கேட்க வேண்டுமானால் நன்றாகயிருக்கும்.நடைமுறைக்கு உதவாது.வெறும் அடிமையரசாகதான் இருக்கும்.
      ஆங்கிலேயர்கள் எவ்வாறு டெல்லியில்,வங்காளத்தில் முகலாயர்களை வென்றார்கள்,மத்தியில் மராத்தாகளை வென்றது,தென்னிந்தியாவில் திப்பு சுல்தானை வென்றது என தகவல்கள் உள்ளனவே தவிர தமிழக சூழ்நிலைப்பற்றி எந்த செய்தியுமில்லை.இந்த நூலுக்கு முன் மு.இராஜேந்திரன் அவர்கள் எழுதிய காலாப்பாணி நாவலை படித்திருந்தேன்.ஆனால் அதில் சொல்லப்பட்ட எந்த செய்தியும் The Anarchyல் இல்லை.இராணுவபலத்துடன் உள்ள அரசுகளைப் பற்றி மட்டுமே இதில் உள்ளது.பிற சிற்றரசுகளைப் பற்றிய செய்திகள் எதுவும் இதில் இல்லை.
      ஆசிரியர் இந்த நூலில் காட்டிய இரண்டு அரசர்கள் நீண்ட நாள் நம் நினைவில் இருப்பார்கள்.ஒருவர் ஷா ஆலம்,பெரும்பாலும் துயர் நிறைந்த ,பரிதாபப்படகூடிய வாழ்க்கை.மற்றொருவர் திப்பு சுல்தான்.ஒரு சிங்கம் என்பதைப் போல்தான் காட்டியிருக்கிறார்.வங்கபஞ்சத்தின் போது வரும் ஒரு நிகழ்ச்சி மனதை உலுக்கியது.EIC அதிகாரி ஒருவர் அவர் சாப்பிட்டுமுடித்து தூக்கியெரிந்த எச்சில் எழும்புத்துண்டை அவர் வீட்டின் வெளியே இருக்கும் இந்தியர்கள் பொருக்கியெடுத்து ஒன்றுமேயில்லாத சக்கை எழும்புதுண்டை நாலைந்து பேர் உறிஞ்சி உறிஞ்சி உண்ண முயல்கிறார்கள்.கடும் பஞ்சத்தின் விளைவு.
      இன்னொரு நிகழ்ச்சி சுவாரஸ்யமானது.கவர்னர் ஜென்றலாகயிருந்த Warren Hastingsக்கும்  அவருக்கு கீழ் பணிபுரிந்த Francisக்கும்   இடையே நடந்த duel(ஒத்தைக்கொத்த சண்டை).அவ்வளவு பெரிய பதவியில் இருந்துகொண்டு  இந்த காட்டுமிராண்டித்தனமான ,அதுவும் துப்பாக்கியால் ஒருவரையொருவர் சுட்டுக்கொண்டு சண்டை போட்டது நாகரீக சமூகத்தின் அலகல்ல.இவர்களுக்கிடையேயான ego போட்டிக்கே இந்த மாதிரி சண்டையென்றால் ,இந்தியர்களை எப்படி நடத்தியிருப்பார்கள்.இவர்களின் இந்த மனநிலைதான் இவர்கள் ஈராக்,ஆப்கானிஸ்தான்,காஜா போன்ற தேசங்களில் இவர்கள் செய்யும் அட்டுலியங்களுக்கான காரணம்.
      நான் முன்பே சொன்னதுபோல் இந்திய காலனியாதிக்கத்திற்க்கு EIC தான் பெரும் பொருப்பு, ஆங்கில அரசுக்கு அல்ல என்பதை நிறுவ எழுதப்பட்டதுதான் இந்த நூல் என கருத இடமிருக்கிறது.மற்றபடி மிகமிக சுவாரஸ்யமான மொழி நடை.புத்தகம் ஆரம்பம் முதல் இறுதி வரை தொய்வேயில்லாமல் ஒரு திரைப்படம் பார்த்த அனுபவம்.
      ஆசிரியருக்கு  என் வணக்கங்கள் !!
      
 
 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Crime and Punishment

                                                   ராஸ்கோல்நிகோவ் என்னும் இளைஞன் இரு கொலைகளைச் செய்கிறான்.ஏன் இந்த கொலைகளை செய்தான்?கொலைக்கு பின்னான அவன் மனப்போராட்டம் .இதையேயே மையமாக வைத்து   எழதபட்ட மிகமிக சுவார்ஸ்யமான,விருவிருப்பான நாவல்.இது வெறும் துப்பரியும் நாவல் மட்டும் இல்லை.             ராஸ்கோல்நிகோவ் ஒரு மதுபான விடுதியில் தற்செயலாக மார்மல்யாடோவை சந்திக்கிறான்.மார்மல்யாடோவ் தன் சோக கதையை ராஸ்கோல்நிகோவிடம் விவரிக்கிறார்.ஒட்டுமொத்த நாவலிலும் மிகச் சிறந்த பகுதி என்று இதைத்தான் குறிப்பிடுவேன்.மார்மல்யாடோவ் தன் முதல் மனைவி மூலம் பெற்ற மகள் சோபியா(சோனியா).பதின்ம வயது.முதல் மனைவி இறந்தவுடன் இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார்.அவரின் இரண்டாம் மனைவிக்கும்(கட்ரினா இவானோவ்னா) இது இரண்டாம் திருமணம்.அவரின் முதல் திருமணம் மூலம் ஏற்கனவே மூன்று குழந்தைகள்.மூவரும் பால்ய வயதினர்.மார்மல்யாடோவ் தன் குடும்பத்த...

Sapiens: A Brief History of Humankind - Yuval Noah Harari

                     இது நான் மிகுந்த ஆவலுடன் படிக்கத் துவங்கிய நூல்.ஆனால் படித்து முடிக்கும் போது மிகுந்த ஏமாற்றத்துடன் இருந்தது.ஹராரி ஒரு பிரசாரகர்(propagandist).காலனியாதிக்கம்,முதலாளித்துவம்,மேற்கத்திய மேட்டிமைவாதம் இவைகளின் பிரசாரகர்.இந்த நூலில் எனக்கிருந்த பிரச்சனைகளை கீழே பட்டியலிடுகிறேன்.               ஆதிகாலத்தில்  மனிதன் அமெரிக்காவிற்க்கும், ஆஸ்திரேலியாவிற்க்கும் முதன்முதலில் குடியேறிய நாட்களில்  அங்கு அவர்கள் செய்ததாக சொல்லப்படும் செயல்கள் ஊகங்களே(எ.கா.பெரும்பான்மையான அரிய வகை விலங்குகளை கொன்றொழித்தது).அதற்கு எந்தவித உறுதியான ஆதாரங்களும் இல்லை.ஆனால் ஹராரி எல்லாவற்றையும் விலாவாரியாக ஏதோ நேரில் பார்த்தவர் போல்  விவரிக்கிறார்.ஏன் இவ்வாறு செய்கிறார் என்பது நூலின் பிற்பகுதியை படிக்கும் போதுதான் புரிகிறது.மேற்கத்தியர்கள் காலனியாதிக்கதின் போது அவர்கள் செய்த கொடுஞ்செயல்களை ஆதிகால பழங்குடியினர் செய்த செயல்களோடு ஒப்பிடும் போது ஒன்றுமில்லை என உணர்த்தத்தான் அவ்வாறு எழுதியிருக...

ஜெயமோகன் குறுநாவல்கள்

                         கிளிக்காலம்:          ஒரு விடலைச்சிறுவன் பெரியவனாகும் கதை.ஜெயமோகன் தரத்தில் இது சுமார் கதை.ஆனால் இதிலும் நல்ல விவரணை.கதை களத்தை கண்முன் காட்டும்படி விவரித்திருக்கிறார். பூமியின் முத்திரைகள்:          இது சுமாரான கதை.நண்பனின் இறப்பை ஒட்டி அவன் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.இதில் வரும் விவரணைகள் எதுவும் கவரவில்லை.      மடம்:         இது முழுக்க முழுக்க கிண்டல்.இதில் மடத்தின் குருவையோ , குருவிற்க்கு அடுத்ததாக வரும் பண்டாரத்தையோ கிண்டல் செய்யவில்லை.கிண்டல் முழுக்க கனபாடிகளைத்தான்.தமிழ்நாட்டில் திராவிட கழகங்கள் இல்லாத நிலையில் இக்கதை சுவாரிஸ்யமாக இருந்திருக்கும்.ஆனால் இங்கு நாளொரு மேனியும் இதே போன்ற பிரச்சாரம் இருப்பதால் இந்த கதை ஈர்ப்புடையதாக இல்லை. லங்காதகனம்:          கதையின் போக்கு முதலிலிருந்தே ஊகிக்க கூடியதாக இருந்தது.மடத்தின் விவரிப்...