முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

The Last Mughal - William Dalrymple

         முதல் இந்திய சுதந்திரப்போர் என்று அழைக்கப்படும் சிப்பாய்கழகம் 1857ல் நடந்தது, பிரிட்டிஷ்ஷார் மாடு மற்றும் பன்றி கொழுப்பு தடவிய குண்டுகளை பயன்படுத்தியதால் இந்து மற்றும் முஸ்லீம் சிப்பாய்கள் புரட்சியில் ஈடுபட்டனர்.இதுவே என் புரிதல்.ஆனால் இந்த புத்தகம் படித்த பின்தான்  சிப்பாய்கழகத்திற்கான காரணங்கள் ஒன்றல்ல, பற்பல சிக்கலான காரணிகள்.இந்நூலாசிரியர் 1850கள் வாக்கில் டெல்லியில் நடந்த  அனைத்து நிகழ்வுகளையும்  விவரித்திருக்கிறார்.இந்த புத்தகத்தை படிக்கும் முன் இதே ஆசிரியர் எழுதிய The Ananarchy படித்திருந்தேன்.The Last Mughalம் அந்த நூலின் தொடர்ச்சியாகத்தான் எனக்குத் தெரிந்தது.சுருக்கமாக இந்த இரு நூல்களைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் அற்புதம்,அபாரம்.
     இந்த ஆசிரியரின் சிறப்பென்பது முதலில்  அவரின் மொழிநடை.அடுத்தடுத்து நிகழ்வுகளை அடுக்கிச் சொல்லும் பாங்கு.ஒவ்வொரு நிகழ்வையும் இந்தியர்களின் பார்வையிலும் அதே நிகழ்வை ஆங்கிலேயர்களின் பார்வையிலும் சொல்லும் விதம்.நான் ஒரே ஒரு முறைதான் டெல்லி சென்றிருக்கிறேன்.ஆனால் மீண்டும் சென்றால் டெல்லியை நான் பார்க்கும் பார்வை முற்றிலும் வேறானதாக இருக்கும்.அந்தளவிற்கு டெல்லி வரலாற்றை,அதன் அழகினை விவரித்திருக்கிறார்.
     தற்போது ஹிந்துகளுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே உள்ள ஒவ்வாமையென்பது 1857க்கு பின் சிப்பாய்கழகத்தின் தோல்விக்குப்பின் ஏற்பட்டவை.அதுவும் பிரிட்டிஷ்ஷாரால் திட்டமிட்டே உருவாக்கப்பட்டது.இதே  போன்ற  பிரசாரத்தை 9/11 தாக்குதலுக்குப் பின் அமெரிக்காவும் செய்தது.தங்களை எதிர்க்கும் எந்த காரணியையும் கொடுரமாக சித்தரிப்பதுதான் வல்லரசுகளின் எதிர்வினை போல.இந்த கோணத்தில் பார்த்தால் History Repeats.
     இந்த வரலாற்றிலேயே மிக சோகமான பகுதி Zafarன் துணைவியர் பற்றியதுதான்.அரண்மனையில் இராணியாக வாழ்ந்தவர்கள் கடைசியில் நாடு கடத்தப்பட்டு சிறையில் அடிமை வாழ்கையில் முடித்திருக்கிறார்கள்.
     இந்த கழகம் தோல்வியில் முடிந்த்தற்க்கு முக்கிய காரணம் ஆங்கிலேயர்களின் படை வல்லமை.அதை தவிர முக்கிய காரணம் அரண்மனையிலேயே நடந்த உள்ளடி வேலைகள் மற்றும் Zafarன் ஊசலாட்டம்(osilating mind).சிப்பாய்கழகத்தின் தரப்பில் போரிட்டவர்களின்  தெளிவின்மை(ஏன் போரிடுகிறோம்).இரண்டாம் உலகப்போருக்குப் பின் காலணியாதிக்கதை இனி தொடரமுடியாது என்பதை புரிந்து கொண்டு எப்படி ஆங்கிலேயர்கள் வெளியேறினார்களோ, அந்த புரிதல் முகலாயர்களிடம் இல்லாததுதான் அவர்களின் அந்த சோகமான முடிவிற்க்கு காரணம்.ஆனால் ஒன்று சிப்பாய்கழகம் வெற்றி பெற்று ஆங்கிலேயர்கள் தோல்வியடைந்திருந்தால் இன்றைய இந்தியா கிடைத்திருக்குமா என்பது சந்தேகம். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Crime and Punishment

                                                   ராஸ்கோல்நிகோவ் என்னும் இளைஞன் இரு கொலைகளைச் செய்கிறான்.ஏன் இந்த கொலைகளை செய்தான்?கொலைக்கு பின்னான அவன் மனப்போராட்டம் .இதையேயே மையமாக வைத்து   எழதபட்ட மிகமிக சுவார்ஸ்யமான,விருவிருப்பான நாவல்.இது வெறும் துப்பரியும் நாவல் மட்டும் இல்லை.             ராஸ்கோல்நிகோவ் ஒரு மதுபான விடுதியில் தற்செயலாக மார்மல்யாடோவை சந்திக்கிறான்.மார்மல்யாடோவ் தன் சோக கதையை ராஸ்கோல்நிகோவிடம் விவரிக்கிறார்.ஒட்டுமொத்த நாவலிலும் மிகச் சிறந்த பகுதி என்று இதைத்தான் குறிப்பிடுவேன்.மார்மல்யாடோவ் தன் முதல் மனைவி மூலம் பெற்ற மகள் சோபியா(சோனியா).பதின்ம வயது.முதல் மனைவி இறந்தவுடன் இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார்.அவரின் இரண்டாம் மனைவிக்கும்(கட்ரினா இவானோவ்னா) இது இரண்டாம் திருமணம்.அவரின் முதல் திருமணம் மூலம் ஏற்கனவே மூன்று குழந்தைகள்.மூவரும் பால்ய வயதினர்.மார்மல்யாடோவ் தன் குடும்பத்த...

Sapiens: A Brief History of Humankind - Yuval Noah Harari

                     இது நான் மிகுந்த ஆவலுடன் படிக்கத் துவங்கிய நூல்.ஆனால் படித்து முடிக்கும் போது மிகுந்த ஏமாற்றத்துடன் இருந்தது.ஹராரி ஒரு பிரசாரகர்(propagandist).காலனியாதிக்கம்,முதலாளித்துவம்,மேற்கத்திய மேட்டிமைவாதம் இவைகளின் பிரசாரகர்.இந்த நூலில் எனக்கிருந்த பிரச்சனைகளை கீழே பட்டியலிடுகிறேன்.               ஆதிகாலத்தில்  மனிதன் அமெரிக்காவிற்க்கும், ஆஸ்திரேலியாவிற்க்கும் முதன்முதலில் குடியேறிய நாட்களில்  அங்கு அவர்கள் செய்ததாக சொல்லப்படும் செயல்கள் ஊகங்களே(எ.கா.பெரும்பான்மையான அரிய வகை விலங்குகளை கொன்றொழித்தது).அதற்கு எந்தவித உறுதியான ஆதாரங்களும் இல்லை.ஆனால் ஹராரி எல்லாவற்றையும் விலாவாரியாக ஏதோ நேரில் பார்த்தவர் போல்  விவரிக்கிறார்.ஏன் இவ்வாறு செய்கிறார் என்பது நூலின் பிற்பகுதியை படிக்கும் போதுதான் புரிகிறது.மேற்கத்தியர்கள் காலனியாதிக்கதின் போது அவர்கள் செய்த கொடுஞ்செயல்களை ஆதிகால பழங்குடியினர் செய்த செயல்களோடு ஒப்பிடும் போது ஒன்றுமில்லை என உணர்த்தத்தான் அவ்வாறு எழுதியிருக...

ஜெயமோகன் குறுநாவல்கள்

                         கிளிக்காலம்:          ஒரு விடலைச்சிறுவன் பெரியவனாகும் கதை.ஜெயமோகன் தரத்தில் இது சுமார் கதை.ஆனால் இதிலும் நல்ல விவரணை.கதை களத்தை கண்முன் காட்டும்படி விவரித்திருக்கிறார். பூமியின் முத்திரைகள்:          இது சுமாரான கதை.நண்பனின் இறப்பை ஒட்டி அவன் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.இதில் வரும் விவரணைகள் எதுவும் கவரவில்லை.      மடம்:         இது முழுக்க முழுக்க கிண்டல்.இதில் மடத்தின் குருவையோ , குருவிற்க்கு அடுத்ததாக வரும் பண்டாரத்தையோ கிண்டல் செய்யவில்லை.கிண்டல் முழுக்க கனபாடிகளைத்தான்.தமிழ்நாட்டில் திராவிட கழகங்கள் இல்லாத நிலையில் இக்கதை சுவாரிஸ்யமாக இருந்திருக்கும்.ஆனால் இங்கு நாளொரு மேனியும் இதே போன்ற பிரச்சாரம் இருப்பதால் இந்த கதை ஈர்ப்புடையதாக இல்லை. லங்காதகனம்:          கதையின் போக்கு முதலிலிருந்தே ஊகிக்க கூடியதாக இருந்தது.மடத்தின் விவரிப்...