முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரவு - ஜெயமோகன்

        

            பகலின் இடைவேளையை தவிர்த்தால் இரவுதான் தொடர்ச்சியானது.இரவே உண்மை வெளிப்படும் வெளி.பகலில் உண்மை மீது வெளிச்சம் எனும் போர்வை மூடப்பட்டு பாசாங்குகளே வெளிப்படுகின்றன.உண்மையை தாங்க முடியாத எளிய உள்ளங்களின் உலகமே பகல்.உண்மையை கண்டு அஞ்சாமல் , பகலின் பாசாங்குதனத்தில் வாழ முடியாதவர்களின் உலகமே இரவு.இரவிலேயே அழகு கூர் கொள்ளும்.மேற்சொன்னவற்றையே மையமாக வைத்து ஒரு புது அனுபத்தை ஒரு நாவலாக தந்திருக்கிறார் ஆசிரியர்.ஜெயமோகனின் மிகச்சிறந்த நாவல்களில் இதுவும் ஒன்று.
       ஒரு அந்நியரான சரவணனை எப்படி முதல் சந்திப்பிலேயே மேனன் தம்பதியினர் அவ்வளவு அந்யோந்யமாக ஏற்று அவருக்கு பெண் பார்க்குமளவிற்கு செல்வார்கள் என்ற  நெருடல் முதலில் இருந்தாலும் , போகப்போக நாவல் பயனித்த தளமும் வேகமும் அந்த நெருடலை ஒன்றுமில்லாது செய்துவிட்டன.
         ஜெயமோகனின் மற்ற நாவல்களைப் போலவே இதிலும்  எளிய மனிதர்களே இயற்கையை   முழுமையாக புரிந்து கொண்டவர்கள் என்ற வகைமையிலேயே  கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.தோமா மற்றும் படகோட்டிகள் முழுமையாக இரவுலகில் வாழ்கிறார்கள்.மேனன், முகர்ஜி போன்ற மேல்தட்டு மக்கள்  பேசிப்பேசி அதில் உள்ள கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு இரவுலகில் வாழ்கிறார்கள்.எந்தப் போரிலும் ஈடுபடாமல் இராணுவத்திலிருந்து ஒய்வு பெறுவதைப்போல வாழ்கையில் எந்த சிக்கல்களையும் சந்திக்காதவர்கள்,ஒரு பெரிய உண்மை அறையும் போது அதை தாங்க முடியாமல் மீண்டும் பகலுலகிற்கே வந்துவிடுகிறார்கள்.
         நீலிமா கதாபாத்திரம் முதலிலிருந்தே அப்பட்டமான உண்மையுடனே காட்டப்படுகிறார்.அவருக்கு இருக்கும் தீவிர காமவெறியை அவர் மறைக்கவில்லை.அதே போல் ஃபாதர் கதாபாத்திர சித்தரிப்பும் சிறப்பு.ஜெயமோகன்  எர்னாகுளத்தையும் காயலையும் வார்த்தைகளினாலேயே வரைந்து காட்டுகிறார்.நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் இரவைப் பற்றிய குருங்கவிதை மிகச்சிறப்பு.
         ஒரு நாவலை படித்தவுடன் ஏதேனும் சிறு மாற்றம் கருத்தளவில் அல்லது கற்பனையில் ஏற்பட்டாலே அந்த நாவலின் வெற்றி எனலாம்.இனி இரவில் ஆள் நடமாட்டம் தெரிந்தால் பயப்படுவதை விட இரவுலகவாசி என்ற பிரமிப்பு ஏற்பட்டாலும் ஏற்படலாம்.
         சில மாதங்களுக்குமுன்  ஜெயமோகன் எழுதிய உலோகம் குறு நாவலை படித்தேன்.அந்நாவல் அவ்வளவாக என்னை கவரவில்லை.ஜெயமோகன் எழுதிய நாவல்களை வரிசைப் படுத்தினால் உலோகம் நாவலை கடைசியில் தான்  வைப்பேன்.இரவு நாவலை முதல் இடத்தில் வைப்பேன்.ஆனால் முதலிடத்திலேயே அவரது பல நாவல்களை வைக்கவேண்டியிருக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜெயமோகன் குறுநாவல்கள்

                         கிளிக்காலம்:          ஒரு விடலைச்சிறுவன் பெரியவனாகும் கதை.ஜெயமோகன் தரத்தில் இது சுமார் கதை.ஆனால் இதிலும் நல்ல விவரணை.கதை களத்தை கண்முன் காட்டும்படி விவரித்திருக்கிறார். பூமியின் முத்திரைகள்:          இது சுமாரான கதை.நண்பனின் இறப்பை ஒட்டி அவன் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.இதில் வரும் விவரணைகள் எதுவும் கவரவில்லை.      மடம்:         இது முழுக்க முழுக்க கிண்டல்.இதில் மடத்தின் குருவையோ , குருவிற்க்கு அடுத்ததாக வரும் பண்டாரத்தையோ கிண்டல் செய்யவில்லை.கிண்டல் முழுக்க கனபாடிகளைத்தான்.தமிழ்நாட்டில் திராவிட கழகங்கள் இல்லாத நிலையில் இக்கதை சுவாரிஸ்யமாக இருந்திருக்கும்.ஆனால் இங்கு நாளொரு மேனியும் இதே போன்ற பிரச்சாரம் இருப்பதால் இந்த கதை ஈர்ப்புடையதாக இல்லை. லங்காதகனம்:          கதையின் போக்கு முதலிலிருந்தே ஊகிக்க கூடியதாக இருந்தது.மடத்தின் விவரிப்...

White Mughals - William Dalrymple

                 பதினெட்டாம் நாற்றாண்டின் இறுதியில் கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றிய ஓர் ஆங்கிலேய அதிகாரிக்கும்(ஜேம்ஸ் கிரிக்பட்ரிக்) இந்திய முகலாய ஆளும் வர்க பெண்ணுக்கும்  (கைர்-உன்-நிசா பேகமமுடன்) இடையிலான காதலை முன் வைத்து எழுதப்பட்ட வரலாற்று நூல்.White Mughals என்றால் இந்திய முகலாய மூஸ்லீம் பெண்களை மணந்த கிழக்கிந்திய கம்பெனியின் ஆங்கில அதிகாரிகள்.இவர்கள் மற்றைய ஆங்கில அதிகாரிகளை போல் சுரண்டல் ஒன்றையே குறிக்கோளாக கொள்ளாமல் இந்தியாவை கொஞ்சம் அனுதாபத்தோடு அணுகியுள்ளனர்.இப்படிபட்ட சிலபல அதிகாரிகளில் ஒருவர் ஜேம்ஸ் கிரிக்பட்ரிக்.      இந்த நூலின் நல்ல விஷயமென்பது நாம் White Mughals பற்றி மட்டும் தெரிந்து கொள்ளவில்லை.18ம் நூற்றாண்டில் எவ்வாறு முகலாய அரசுகள் இயங்கின என்பதைப் பற்றியும் ,ஹைதராபாத் நகரின் வரலாறு பற்றியும் விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.       William Dalrymple தனக்கு கிடைத்த ஆதாரங்களை வைத்து இந்நாலை சுவாரிஷ்யமாக  எழுதியுள்ளார்.ஆனால் White M...

Sapiens: A Brief History of Humankind - Yuval Noah Harari

                     இது நான் மிகுந்த ஆவலுடன் படிக்கத் துவங்கிய நூல்.ஆனால் படித்து முடிக்கும் போது மிகுந்த ஏமாற்றத்துடன் இருந்தது.ஹராரி ஒரு பிரசாரகர்(propagandist).காலனியாதிக்கம்,முதலாளித்துவம்,மேற்கத்திய மேட்டிமைவாதம் இவைகளின் பிரசாரகர்.இந்த நூலில் எனக்கிருந்த பிரச்சனைகளை கீழே பட்டியலிடுகிறேன்.               ஆதிகாலத்தில்  மனிதன் அமெரிக்காவிற்க்கும், ஆஸ்திரேலியாவிற்க்கும் முதன்முதலில் குடியேறிய நாட்களில்  அங்கு அவர்கள் செய்ததாக சொல்லப்படும் செயல்கள் ஊகங்களே(எ.கா.பெரும்பான்மையான அரிய வகை விலங்குகளை கொன்றொழித்தது).அதற்கு எந்தவித உறுதியான ஆதாரங்களும் இல்லை.ஆனால் ஹராரி எல்லாவற்றையும் விலாவாரியாக ஏதோ நேரில் பார்த்தவர் போல்  விவரிக்கிறார்.ஏன் இவ்வாறு செய்கிறார் என்பது நூலின் பிற்பகுதியை படிக்கும் போதுதான் புரிகிறது.மேற்கத்தியர்கள் காலனியாதிக்கதின் போது அவர்கள் செய்த கொடுஞ்செயல்களை ஆதிகால பழங்குடியினர் செய்த செயல்களோடு ஒப்பிடும் போது ஒன்றுமில்லை என உணர்த்தத்தான் அவ்வாறு எழுதியிருக...