இந்த நாவல் அதர்வண வேத காலத்தில் நடக்கும் கதை.நாவலின் பின் அட்டையில் சொல்லியபடி இது ஒரு முன்னுதாரணம் அற்ற நாவல்.சரஸ்வதி நதி எவ்வாறு மறைந்திருக்கும் என்பதை விவரிக்கும் ஒரு மாய யதார்த்த நாவல்.
அதர்வன்,குத்சன்(சுத்திர முனி),சாரன்,விண்ணுலா,காமாயனி- இவர்கள் தான் முக்கிய கதாபாத்திரங்கள்.அதர்வ மஹரிஷி தன் ஆசிரமத்தில் பல்வேறு தரப்பட்ட மாணாக்கர்களுக்கு பாடம் கற்பிக்கிறார்.ஆனால் குத்சனை மட்டும் தவிர்க்கிறார்.குத்சனை முனி என்றும் அங்கீகரிக்கிறார்.குத்சன் அதர்வன் மேல் பெருமதிப்பு வைத்திருந்தாலும் ,தன்னை சீடனாக ஏற்க மறுப்பதால் அதர்வன் மேல் கோபம் கொள்கிறார்.ஒரு கட்டத்தில் ஒருவர் மேல் மற்றொருவர் மாறி மாறி சாபம் கொள்கிறார்கள்.இயற்கை ரிதனின் படி அதர்வன் பிறப்பும் இறப்பும் அற்றவன்.ஆனால் குத்சனின் சாபம் அதை குலைக்கிறது.குத்சனின் சாபத்தை நிறைவேற்ற பைசாச குலத்தைச் சேர்ந்த சாரன் வருகிறான்.கடைசியில் சாரன் எவ்வாறு அதர்வனை கொல்கிறான்,சரஸ்வதி நதி எவ்வாறு மறைகிறது என்பதே நாவலின் கதை.
நாவல் பெரும்பாலும் சுவாரஸ்யமாகவே பயணிக்கிறது.ஆசிரியரின்(பா.ரா) மொழிநடை,மேற்கோள் காட்டும் படியான வசீகரமான வரிகள் நாவலை தங்கு தடையின்றி வாசிக்க வைக்கின்றன.நாவலின் தொடக்கம் அட்டகாசம்.எவ்வாறு சாரன் அதர்வனை கொல்லுவான் என்ற எதிர்பார்ப்பு நாவல் இறுதிவரை உண்டு.
நாவலின் விமர்சனமாக நான் பார்ப்பது இந்த நாவல் ஒரு நேர்கோட்டில் பயணிக்காமல் flashbackகிலேயே பெரும்பாலும் விவரிக்கப்படுகிறது.வேதகாலத்தில் நடக்கும் சாதிப்பிரச்சனை ஏதோ தற்கால தமிழ் சினிமாவில் காட்டுவதைப் போலவே இந்த நாவலிலும் வருகிறது.சாரன் முதல் முறை அதர்வனின் அபூர்வ சக்திகளை கண்டு வியப்பதோடல்லாமல் ஒவ்வொரு முறையும் வியக்கும் படி காட்டியிருப்பது கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்துகிறது.
சலம் புதிய கதைகளத்துடன் புதிய நடையில் வாசகர்களுக்கு ஒரு புதிய வாசிப்பனுபவத்தை தருகிறது.ஆசிரியருக்கு என் வணக்கங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக