ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றை எப்படி எழுத வேண்டும் என்பதற்கு இந்த நூல் ஒரு சிறந்த உதாரணம்.இந்நூல் மூலம் ராமானுஜன் மேலும் G.H.Hardy மேலும் ஏற்படும் பெருமதிப்பு,வியப்பு இந்நூலாசிரியர் மேலும் ஏற்படுகிறது.காரணம் இந்நாலூக்காக அவர் செலுத்தியிருக்கும் உழைப்பு.
ராமானுஜத்தின் கணிதம் எவ்வளவு சிக்கலானதோ அதேபோல அவர் வாழ்க்கையும் சிக்கலானது.காலத்தால் நூறு ஆண்டுகளுக்கு முந்தையது.ஆசிரியருக்கு இந்திய வாழ்கைமுறை மிக அண்ணியமானது.மேலும் நூறு ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்கைமுறை அவருக்கு மேலும் புரிந்து கொள்ள கடினமானது.இருந்தும் மிகச் சிறப்பாக இந்நாலை எழுதியிருக்கிறார்.
ராமானுஜனின் பிறப்பு முதல் அவரின் இறுதி காலம் வரை அவருடையப் பயணத்தை அழகாக சொல்லியிருக்கிறார்.இது எந்த அளவுக்கு ராமானுஜனின் வரலாரோ அதே அளவுக்கு G.H.Hardyன் வரலாறும் ஆகும்.ஒருவகையில் ஒருவரை பிரித்து இன்னொருவர் வரலாற்றை எழுதிவிட முடியாது என்றளவிற்கு அவர்கள் பிணைப்புள்ளது.
ராமானுஜன் ஒரு சுயம்புவாகவே கணிதம் கற்றிருக்கிறார்.அவர் கணிதப்புத்தகம் மூலம் தானே பயின்றிருக்கிறார்.எந்த முறையான கணிதப் பயிற்ச்சியும் அவருக்கில்லை.இது வரமா அல்லது சாபமா என்பது ஆய்வுக்குரியது. G.H.Hardy ராமானுஜனின் சிறப்பாக அவருடைய originality மற்றும் intutionஐ கருதுகிறார்.அவர் முறையான பயிற்சி பெற்றிருந்தால் அந்த originality மற்றும் intutionஐ இழந்திருக்கலாம் என்று கருதுகிறார்.இந்திய கல்விமுறை(12 ஆண்டு பள்ளிக்கல்வி, 3 ஆண்டு கல்லூரிப் படிப்பு) நம்மை குமாஸ்தாவாகவே உருவாக்கும்.எந்த புதிய முயற்சியும் கண்டுபிடிப்பும் உருவாகிட வழியில்லை.G.H.Hardy அக்காலத்திய தேர்வுமுறையை(Tripos's) வெகுவாக சாடுகிறார்.இது தற்காலத்திய நுழைவுத் தேர்வுகளை நினைவுரறுத்துகிறது.ராமானுஜமும் G.H.Hardyம் pure mathematicsஐயே விரும்பினர்.நூறாண்டுகளாகியும் ராமானுஜனின் நிறைய விதிகள்(theorms) மற்றும் சமன்பாடுகள்(equations) கணிதவியளாளருக்கு புதிராகவே உள்ளன.ஒருவர் எவ்வாறு இப்படி சிந்திக்க இயலும் என்பது ஆச்சர்யமாகவே உள்ளது.
எந்தவொரு புதிய கண்டுபிடுப்பும் ஒரு கணநேரத்தில் உதிப்பதே.அதுவொரு நுண்ணுனர்வு(intution).எப்போதும் நம்முடன் இருப்பதே.அதை அறிந்துகொள்வதே கண்டுபிடிப்பு.கல்வி எப்போதும் அதை(intution) வளர்ப்பதாகவே இருக்க வேண்டும்.மாறாக நம் கல்விமுறை அதை அழிப்பதாகவே உள்ளது.ஒரு வகையில் ஜெயமோகன் கூறியதைப்போல பகுத்தறிவு புதிய கற்பனையை தடுக்கக்கூடியதே..எப்போதும் விதிகளுக்குடபட்டே சிந்தித்தல் புதிய கண்டுபிடிப்புகளுக்கு தடைதான்.அந்த எல்லைகளுக்கு வெளியே விதிகளுக்கு(rules) மாறாக சிந்திக்கும் போதே புதிய திறப்புகள் கிடைக்கும்.இது அறிவியலுக்கு மட்டுமல்ல.அனைத்து துறைகளுக்கும் பொருந்தும்.
நாம் இன்றும் campus interviewலும் நுழைவுத் தேர்வில் தேர்வாவதையும் வெற்றி என நினைத்துக்கொண்டிருந்தால் சிறந்த குமாஸதாகளையே உற்பத்தி செய்ய இயலும்.(நான் பார்த்தவரையில் ஐ.டி துறையில் குமாஸ்தாவாக இல்லாத ஒருவரைக்கூட கண்டதில்லை)ஒருவருடைய தனித்தன்மையை வளர்க்காமல் பொதுமைப்படுத்தலையே நாம் செய்து கொண்டிருக்கிறோம்.நம் கல்விமுறையும் கல்வி பற்றிய நம் புரிதலும் மாற வேண்டிய மாற்ற வேண்டிய தருணம் இது.அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய பத்தகம்.
(இந்த விமர்சனம் கரோனா காலகட்டத்தில் (2020) ஒரு நோட்டுப்புத்தகத்தில் எழுதப்பட்டது.)
கருத்துகள்
கருத்துரையிடுக